ஆணைக்குழு முன் தந்தை மன்றாட்டம் எனது மகள் முல்லைத்தீவு – முத்தையன்கட்டு காட்டுப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் இன்றும் உயிருடன் இருக்கின்றாள். எனது மகளை மீட்டுத்தாருங்கள் என்று காணாமல் போயுள்ள பிறேம்நாத் அபிராமி (வயது29) என்ற யுவதியின் தந்தை காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிடம் மன்றாட்டமாகக் கோரி சாட்சியமளித்தார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்
கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரேம்நாத் அபிராமி (வயது 29) ஆகிய எனது மகளை கடந்த 2007ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் விடுதலைப்புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பின் போது பிடித்துச் சென்றனர். பின்னர் 2008ஆம் ஆண்டு வீட்டிற்கு வந்து சென்றார். அதன் பின்னர் நாங்கள் கிளிநொச்சியில் இருந்து இடம் பெயர்ந்து சென்று விட்டோம்.
பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்று செட்டிகுளம் மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தோம். இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் எனது மகளை இராணுவத்தினர் செட்டிகுளம் மெனிக்பாம் வலயம் -4 நலன்புரி நிலையத்திற்கு கொண்டுசென்று உறவினர்களை தேடியதாக எனக்கு நன்கு தெரிந்தவர்கள் எல்லோரும் சொன்னார்கள். ஆனால் எனது மகள் என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை.
தற்போது இராணுவ முகாம்களில் இருந்து மரக்கறிகள் செய்கின்றார்கள் . இவ்வாறு வைத்திருப்பவர்களை வைத்தே அவர்கள் இதனைச் செய்கின்றார்கள் என நாங்கள் நம்புகின்றோம்.
முத்தையன்கட்டு காட்டுப்பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் எனது மகளையும் சில பிள்ளைகளையும் வைத்திருப்பதாக நான் அறிந்து கொண்டேன். எனது மகள் உயிருடன் தான் இருக்கின்றார்கள் அவரை எப்படியாவது மீட்டுத்தாருங்கள் என தந்தை ஆணைக்குழவின் முன் மன்றாட்டமாக சாட்சியமளித்தார்.
மீசாலை இராணுவ முகாம் இராணுவத்தினர் எனது மகனைப் பிடித்து இரண்டு கை களையும் பின்பக்கமாக தென்னை மரத்துடன் கட்டிவைத்து நாய்க்குச் சாப்பாடு போடுவதுபோல மகனின் கால்களுக்கு கீழ்சாப்பாட்டு பொதியை வைத்து நக்கிச்சாப்பிட வைத்தனர்' என இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு காணாமற்போன செல்வரட்ணம் உதயராஜ் (வயது 26) என்பவரின் தாயார் கண்ணீர் மல்க சாட்சியமளித்தார்.
காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவில் காணாமற்போனோரின் உறவினர்கள் சாட்சியமளிக்கும் அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில்
'கிளிநொச்சியிலிருந்து கடந்த 2005 ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம்திகதி வேலைக்காக மகன் யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். எனது மகனையும் கஜேந்திரன் தினேஸ்குமார் என்ற இரண்டு பேரையும் சேர்த்து டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி மீசாலை இராணுவம் பிடித்துச் சென்றது. மற்ற இருவரையும் மறுநாள் கிராம அலுவலர் முன்னிலையில் இராணுவம் விடுதலை செய்தது. ஆனால் எனது மகனைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்தனர். எனது சகோதரி டிசம்பர் மாதம் 30ஆம்திகதி மீசாலை முகாமுக்கு சென்று எனது மகனைப் பார்த்தார்.
மகனின் இரண்டு கைகளையும் பின்பக்கமாக தென்னை மரத்துடன் கட்டிவைத்து நாய்க்குச் சாப்பாடு போடுவதுபோல மகனின் கால்களுக்கு கீழ் சாப்பாட்டு பொதியை வைத்து நக்கிச் சாப்பிட வைத்திருப்பதை எனது சகோதரியான அக்கா கண்டார்.
எனது மகன் பிடிக்கப்பட்டமை தொடர்பில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றில் முறைப்பாடு பதிவுசெய்தேன். இந்நிலையில் 2006ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 14ஆம் திகதி எனது மகனை மீசாலை முகாமில் இருந்து வேம்பிராய் இராணுவ முகாமுக்கு கொண்டுசென்றனர். அதன் பிறகு மகன் தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை' என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM