'தகவல் வழங்கப்பட்டும் வன்முறைகளை தடுக்க பொலிஸ், முப்படை தவறியுள்ளன'

Published By: Vishnu

27 May, 2019 | 08:42 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

வடமேல் மாகாணம், மினுவாங்கொடை பகுதியிலும் வன்முறையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில், அவை இடம்பெற சில மணி நேரத்துக்கு முன்பாகவே பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தும் அவற்றை தடுக்க எந்த நடவடிக்கைகளும் அவர்களால் எடுக்கப்படவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு  தெரிவித்துள்ளது.  

இந் நிலையில் அந்த வன்முறைகள் தொடர்பில் அவற்றை சீர் செய்ய இன்று வரை உறுதியான எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என  மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் கலாநிதி  தீபிகா உடுகம பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

வன்முறைகள் நடந்த இடங்களுக்கு தாம் நேரில் சென்று தகவல் திரட்டியதாகவும், இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலதிகமாக அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள், கிராமத் தலைவர்கள்,  பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் என பலரிடம் தாம் கருத்து பதிவு செய்ததாகவும் அதிலிருந்தே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கலாநிதி தீபிகா உடுகம தனது கடிதத்தில் பதில் பொலிஸ் மா அதிபருக்கு சுட்டிக்கடடியுள்ளார்.

23.05.2018 என்ற திகதியிடப்ப்ட்ட குறித்த கடிதத்தில்,  வடமேல் மாகாணத்தில்  பதிவான வன்முறைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் வன்முறையாளர்களுக்கு எதிராக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க  சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54