உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; இதுவரை வழங்கப்பட்ட நஷ்டஈட்டுத் தொகை எவ்வளவு தெரியுமா?

Published By: Vishnu

27 May, 2019 | 03:29 PM
image

(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு இதுவரையில் மொத்தம் 149 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் இதுவரையில் 153 பேரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களில் 186 பேருக்கும் முழுமையான நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் குறிப்பிட்டிருக்கிறது. 

அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மொத்தமாக 129 மில்லியன் ரூபா நஷ்டஈடும், காயமடைந்தவர்களுக்கு மொத்தமாக 20 மில்லியன் ரூபா நஷ்டஈடும் வழங்கப்பட்டுள்ளது. 

காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் போது அவர்களது மருத்துவ பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் நஷ்டஈட்டுத் தொகை தீர்மானிக்கப்படும் என்றும் அவ்வலுவலகம் தெரிவித்தது.

குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் இன்னமும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவை பூர்த்தி செய்யப்படும் என்றும் இழப்பீட்டிற்கான அலுவலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33