(நா.தனுஜா)
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்தவர்களுக்கு இதுவரையில் மொத்தம் 149 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் இதுவரையில் 153 பேரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களில் 186 பேருக்கும் முழுமையான நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் குறிப்பிட்டிருக்கிறது.
அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மொத்தமாக 129 மில்லியன் ரூபா நஷ்டஈடும், காயமடைந்தவர்களுக்கு மொத்தமாக 20 மில்லியன் ரூபா நஷ்டஈடும் வழங்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் போது அவர்களது மருத்துவ பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் நஷ்டஈட்டுத் தொகை தீர்மானிக்கப்படும் என்றும் அவ்வலுவலகம் தெரிவித்தது.
குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் இன்னமும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவை பூர்த்தி செய்யப்படும் என்றும் இழப்பீட்டிற்கான அலுவலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM