மட்டக்களப்பில் சி.சி.டி.வி.கமராக்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்று இன்று (27) திங்;கட்கிழமை அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்குப் பின்பகுதியில் பார் வீதியிலுள்ள முகம்மட் சபீக் என்பவருக்கு சொந்தமான வர்த்தக நிலையமே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் இன்று (திங்கட்கிழமை) காலை தனது வர்த்தக நிலையத்தினை திறந்த போது வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்துள்ளதைக் கண்டு மட்டக்களப்பு தலைமையக பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
குறித்த இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.குமரசிறீ மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.என்.ஜி.கீத்தா வத்துரு உட்பட பொலிஸ் அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த சி.சி.டி.வி.கமராக்கள் மற்றும் அங்கிருந்த ,இலத்திரணியல் உபகரணங்கள் என்பன முற்றாக எரிந்துள்ளன. முப்பது இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் எரிந்துள்ளதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்தார். அத்துடன் கடையில் சி.சி.டி.வி கமாரா பொருத்தப்பட்ட பிரதான ஹார்ட் டிஸ்க்கும் காணாமல் போயுள்ளது.
இது நாசக்கார செயலாக இருக்கலாமெனவும் இந்த வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM