ஜனாதிபதியை சந்தித்த தாய்லாந்தின் மகா நாயக்க தேரர் உள்ளிட்ட தூதுக் குழு 

Published By: Digital Desk 4

26 May, 2019 | 04:04 PM
image

இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்து மகா நாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த தூதுக் குழுவினர் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாத தாக்குதலுக்கு முகங்கொடுத்து மீண்டும் எழுந்திருக்கும் இலங்கை குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட தூதுக் குழுவினர், சகோதர பௌத்த நாடு என்ற வகையில் எப்போதும் தாம் இலங்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். 

தேரர்களின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி பௌத்த நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால நெருங்கிய உறவுகளை இதன்போது நினைவுகூர்ந்தார். 

Phசய டீhயறயயெமாநஅயமாரn றயவ ஆயாநலழபெ தேரரின் தலைமையில் தாய்லாந்து மகா நாயக்க தேரர் உள்ளிட்ட 70 பேர் கொண்ட தூதுக் குழுவினர் கடந்த 21ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன்இ கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று வெசாக் கொண்டாட்டங்களையும் பார்வையிட்டனர்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு விகாரைகளுக்கு சென்று பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

தாய்லாந்து பௌத்த தூதுக் குழுவினருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பில் தாய் ஸ்ரீ லங்கா பௌத்த கலாசார மத்திய நிலையத்தின் விகாராதிபதி சங்கைக்குரிய ராஸ்ஸகல சீவலி நாயக்க தேரரும் கலந்துகொண்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெய்ரா ஏரியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய...

2025-01-24 08:12:12
news-image

முன்னாள் ஜனாதிபதிளுக்கு அரச இல்லங்களை விட்டு...

2025-01-23 16:06:37
news-image

இன்றைய வானிலை 

2025-01-24 06:15:28
news-image

கிரேன்பாஸில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற...

2025-01-24 03:51:07
news-image

பயணிகள் பேருந்தும், கொள்கலன் லொறியும் மோதி...

2025-01-24 03:41:09
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450...

2025-01-24 03:32:58
news-image

அரச அதிகாரிகளுக்கு, தேவையான தகமையுடையவருக்கு வழங்கப்படும்...

2025-01-24 03:54:36
news-image

சுவாசநோய் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு -...

2025-01-24 03:16:45
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கான விவசாயத்துறை அமைச்சு மற்றும்...

2025-01-23 15:03:48
news-image

புதிய விண்ணப்பதாரர்களுக்காக  ஒரு இலட்சத்து 25...

2025-01-23 23:56:46
news-image

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும்...

2025-01-23 23:53:07
news-image

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக...

2025-01-23 22:09:21