இஸ்லாமிய விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மறுசீரமைப்புக்கள் தேவை- முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள்

Published By: Daya

25 May, 2019 | 04:35 PM
image

(நா.தனுஜா)

இஸ்லாமிய விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எம்முடைய நாட்டில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். எனினும் இந்தத் தனியார் சட்டத்தில் முஸ்லிம் சமூகம் கோருகின்ற மாற்றங்களைச் செய்வதே தேவையாகும். மாறாக முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை முழுமையாக இல்லாமல் செய்வது என்பது அந்தச் சமூகத்திற்கு இழைக்கின்ற அநீதியாகவே அமையும் என்று முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 

முஸ்லிம் விவாக, விவகாரத்துச் சட்டத்தில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கும், பொதுவானதொரு திருமண வயதெல்லையை நிர்ணயிப்பதற்கும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இதுகுறித்து முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர் ஒருவரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் பொதுச்சட்டம் என்ற ஒன்று காணப்படுகின்ற அதேவேளை, முஸ்லிம்களுக்கென தனியார் சட்டமும் உள்ளது. அதுவே ஷரியா சட்டம் என்று அழைக்கப்படுகின்றது. பொதுச்சட்டத்தின் பிரகாரம் திருமண வயதெல்லையாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தின் கீழான முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின்படி வயதுக்கு வந்தவர்கள் திருமணம் செய்வதற்குத் தகுதியுடையவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். 

அதன்படி 18 வயதை அடையும் முன்னரே திருமணம் செய்துவைக்கும் சம்பவங்கள் எம்முடைய நாட்டில் நடைபெறவே செய்கின்றன. அதேபோன்று முஸ்லிம்களின் திருமணங்கள் பொதுச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை. மாறாக தனியார் சட்டத்தின் கீழேயே பதியப்படுகின்றன. அதேபோன்று விவாகரத்துப் பெறுவதாயின் முஸ்லிம்களுக்கென காதி நீதிமன்றங்கள் உண்டு.

இந்நிலையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எம்முடைய நாட்டில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். எனினும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பொன்றின் சிபாரிசை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. 

எனினும் இந்தத் தனியார் சட்டத்தில் முஸ்லிம் சமூகம் கோருகின்ற மாற்றங்களைச் செய்வதே தேவையாகும். மாறாக முஸ்லிம்களுக்கான தனியார் சட்டத்தை முழுமையாக இல்லாமல் செய்வது என்பது அந்தச் சமூகத்திற்கு இழைக்கின்ற அநீதியாகவே அமையும். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாக நோக்குகின்ற நிலையொன்று உருவாகியிருக்கும் சூழ்நிலையில், அரசாங்கம் முஸ்லிம் தனியார் சட்டத்தில் எத்தகைய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருக்கின்றது என்பது குறித்து சிந்திப்பது அவசியாகும் என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில்...

2024-03-29 15:37:15
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37