(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
இஸ்லாம் அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு மாணவர்களை அடக்க நடவடிக்கை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதலை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு முடியாமல் போயுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று அவசரகாலச்சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது. தொடர்ந்தும் அதனை நீடிப்பதன் அவசியம் இருப்பதால் அதற்கு ஆதரவளிக்கின்றோம். ஆனால் அவசரகால சட்டத்தை தொடர்ந்து கொண்டுசெல்வது ஜனநாயகத்துக்கு விரோதமாகும்.அது மக்களை கட்டுப்படுத்துவதாக அமையும்.
இஸ்லாம் அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்தவே அவசரகால சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தியது. ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் மாணவ தலைவர் மற்றும் செயலாளர் இருவரும் இந்த சட்டத்தை பயன்படுத்தி பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
இது முறையாகாது. அவசரகால சட்டத்தை அமுல்படுத்தும்போது, இந்த சட்டத்தை பயன்படுத்தி தொழிற்சங்க போராட்டங்களையோ அரசியல் பழிவாங்கல்களையோ மேற்கொள்ள இடமளிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதற்கான பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
அப்படியானால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பது அடிப்படைவாத குற்றத்துக்கு அல்ல. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு கீழே கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அதுதொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும்.
மேலும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையில் மக்கள் கோபப்பட்டு வன்முறைகளில் ஈடுபடுவதை தடுக்கவே அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சட்டம் அமுலில் இருக்கும்போதுதான் குருணாகல் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் மினுவாங்கொடை பகுதியிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அந்த மக்களின் கடைகள் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. இதற்கு பின்னால் அரசியல் சக்திகள் இருப்பது தற்போது உறுதியாகி இருக்கின்றது. என்றாலும் அரசாங்கத்துக்கு இதனை கட்டுப்படுத்த முடியாமல்போயுள்ளது.
பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நஷ்டயீடு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இன்னும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. அதுதொடர்பில் எந்த அறிவிப்பும் செய்யவில்லை. அதனால் அரசாங்கம் அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்கள் தொடர்பாக அவதானம் செலுத்துவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீட்டை முறையாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM