குஜராத்தில் பயிற்சி நிலையத்தில் தீ விபத்து: 19 மாணவர்கள் பலி!

Published By: Vishnu

24 May, 2019 | 08:32 PM
image

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள பயிற்சி மையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா பகுதியில் உள்ள பயிற்சி நிலைய கட்டடமொன்றிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட பயிற்சி நிலையத்தில் 14 முதல் 17 வயது மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர் என்று கூறப்படுவதுடன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மாணவர்கள் சிலர் கட்டடத்திலிருந்து கீழே குதித்துள்ளனர்.

அதில் பலர் காப்பாற்றப்பட்டு அருகில் இருக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் தீயை அணைக்க 18 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் படையினர் போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்தினால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம்  இதுவரை கண்டறியப்படாத நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17