பா.ஜ.க ஒரு மூழ்கும் கப்பல். மூழ்கும் கப்பலில் இருக்கைகளை எங்கே வைத்தால் தான் என்ன? என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினரும், மத்திய அமைச்சருமான சசி தரூர் பா.ஜ.கவை கிண்டல்,செய்துள்ளார்
இது தொடர்பாக அவர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
“ நான் கருத்துக்கணிப்புகளை நம்புவதில்லை. இதற்கு முன்னரும் பலமுறை கருத்துக்கணிப்புகள் பொய்த்துள்ளன. 2004 ஆம் ஆண்டில் கருத்துக்கணிப்புகள் வாஜ்பாய் வெற்றி பெறுவார் என்றது. ஆனால் என்ன நடந்தது? முடிவு என்னவாக இருந்தாலும், இப்போது கருத்து கணிப்புகளில் சொல்லப்படும் அளவிற்கு சீட்டுகளை நிச்சயமாக பா.ஜ.க பெறாது.
கருத்துக் கணிப்புகள் எப்போதுமே ஒரு சார்பாகவே இருப்பது இயல்பு. மக்களிடம் யாராவது சென்று கருத்துக் கணிப்பு என கேள்வி கேட்டால், அவர்கள் ஆளுங்கட்சி ஆட்களோ என பயந்து, மக்கள் ஆளுங்கட்சிக்கு வாக்களித்ததாக தான் சொல்வார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் வேறு கட்சிக்கு வாக்களித்து இருக்கலாம்.
தேர்தல் முடிவிற்கு முன்னர் பாஜகவினர் என்ன மாதிரியான கொண்டாட்டத்தில் வேண்டுமானாலும் ஈடுபடட்டும். ஆனால் இறுதி முடிவு வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது. வாக்காளர்களின் விருப்பம் என்னவென்பது நாளை நமக்கு தெரிந்துவிடும். பா.ஜக ஒரு மூழ்கும் கப்பல். அந்தக் கப்பல் இருக்கைகளை எங்கே வைத்தால் தான் என்ன? என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM