ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலை பிற்போடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.அவர் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போது தான் ஒரு தடவை மாத்திரமே தேர்தலில் போட்டியிடுவேன் என்று வாக்குறுதியளித்தார்.
அதன்படியே செயற்படுவார் என்று எதிர்பார்ப்பதாக எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து எதிர்கட்சி என்ற ரீதியில் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும்.
எனினும் நாம் இன்னும் அது குறித்து தீர்மானிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு தாக்குதல்களின் பின்னர் இரு வாரங்கள் தாமதித்து பாடசாலைகளில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், மாணவர்களின் வருகை மிகக் குறைவாகவே காணப்பட்டது.
இதன் காரணமாக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு நேற்றைய தினம் நேரடி விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
அதனடிப்படையில் எதிர்கட்சி தலைவர் கொழும்பிலுள்ள பாடசாலைகளான தேர்ஸ்டன், ராஜகீய, விஷாகா, இந்து கல்லூரி, ஆனாந்தா மற்றும் நாலந்தா ஆகியவற்றுக்கு விஜயம் செய்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM