பூஜித் - ஹேமசிறிக்கு எதிரான மனு 31 ஆம் திகதி பரிசீலனைக்கு

Published By: Vishnu

22 May, 2019 | 10:10 AM
image

( எம்.எப்.எம்.பஸீர் )

தெளி­வான உளவுத் தகவல் கிடைத்தும், உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்­தப்­பட்ட  தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை தடுக்க நட­வ­டிக்கை எடுக்கத் தவ­றி­யதன் ஊடாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர மற்றும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகியோர் பொதுமக்­களின் அடிப்­படை உரி­மை­களை மீறி­யுள்­ள­தாக கூறி  தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவை எதிர்­வரும் 31 ஆம் திகதி பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்ள நேற்று உயர் நீதி­மன்றம் தீர்­மா­னித்­தது. 

கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்தில் நடத்­தப்­பட்ட தற்­கொலைத் தாக்­கு­தலில் தமது பிள்­ளைகள் இரு­வரை இழந்த தந்­தை­யான  சமன் நந்­தன சிறி­மான்ன, சுற்­றுலாத்துறை வர்த்­தக நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ள நபர் ஒருவர் என இருவர் தாக்கல் செய்­துள்ள அடிப்­படை உரிமை மீறல் மனுவின் மீதான  பரி­சீ­ல­னை­களே அந்த திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டன. 

நேற்­றைய தினம் இந்த மனுக்கள் உயர் நீதி­மன்றின் நீதி­யரசர்­க­ளான புவ­னேக அலு­வி­கார, எல்.டி.பி. தெஹி­தெ­னிய மற்றும்  ப்ரீத்தி பத்மன் சூர­சேன ஆகியோர் அடங்­கிய மூவர் கொண்ட  நீதி­யர­சர்கள் குழாம் முன்­னி­லையில் பரி­சீ­ல­னைக்கு வந்­தது.

இதன்­போது  முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­னாண்டோ சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஷ பிரே­ம­ரத்­னவும்,  கட்­டாய விடு­மு­றையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர சார்பில்  ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி  வர்­ண­சூ­ரி­யவும் ஆஜ­ரா­கினர். 

 மனு­வா­னது பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்டபோது, முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­னா­ண்டோ சார்பில் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனுஷ பிரே­ம­ரத்ன,  தனது சேவை பெறு­ந­ருக்கு உரிய முறையில்  அறி­வித்தல் கிடைக்­க­வில்லை எனவும்  பத்­தி­ரிகை செய்­தி­களைப் பார்த்தே தான் மன்றில் ஆஜ­ரா­ன­தா­கவும் கூறினார்.

 இந்­நி­லையில் பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பாக மனுவில் பெய­ரி­டப்­பட்­டுள்ள   பொலிஸ் மா அதிபர் பூஜித் மற்றும் முன்னாள் பாது­காப்பு செயலர் ஹேம­சிறி பெர்­னாண்டோ ஆகியோருக்கு உரிய முறையில் அறிவித்தலைக் கையளிக்குமாறு மனுதாரர் தரப்புக்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன்  மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி ஆராய்வதாக அறிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01