இனப்பிரச்சினைக்கான தீர்வு சமஷ்டி முறையின் அடிப்படையிலேயே காணப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்திற்கு விஜ யம் மேற்கொண்ட சுவீடன் வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை வந்துள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ட்ஸ்டர் நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இவர் வடமாகாண முதலமைச்சரை கைதடியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இக்கலந்துரையாடல் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்ததாவது,
கலந்துரையாடலில் ஈடுபட்ட சுவீடன் வெ ளிவிவகார அமைச்சர் இலங்கையின் அரசியல் நிலைப்பாடுதொடர்பில் தாம் அறிந்து வைத்துள்ளதாகவும் தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது என என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
நாட்டில் அரசியல் ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டு ஜனநாயகம் எங்களிடம் பரவியுள்ளது என எண்ணுகிறேன் என அவரிடம் பதிலளித்திருந்தேன். இதன்போது அவர், உங்களுடைய நாட்டிலே அனைத்து செயற்பாட்டையும் சேர்த்துப் பார்க்கும்போது நாடு நல்ல இடத்திலேயே இருப்பதை உணருகின்றேன் எனத் தெரிவித்ததுடன் தம்மால் எவ்விதமான உதவிகளையும் செய்யமுடியாமல் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
நாட்டிலுள்ள செயற்பாடுகள் அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் போது நல்ல நிலையில் இருந்தாலும் வடமாகாணத்தைப் பொறுத்தவரை பின்தங்கிய நிலையிலே உள்ளது. எனவும் அதனை மீள்கட்டமைக்க உங்களுடைய உதவி தேவையென்றும் சுவீடன் வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
இதேவேளை வெளிவிவகார அமைச்சர் என்னிடம் எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படவேண்டும் எனக் கேட்டிருந்தார்.
அரசியல் ரீதியான தீர்வைக் காணவேண்டிய அவசியத்தைக் அவருக்கு எடுத்துக் கூறினேன். அதன்போது அவர் எவ்வாறான தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என என்னிடம் கேட்டிருந்தார்.
சமஷ்டி முறையே சரியான தீர்வென கூறினேன். அதாவது பல வருடங்களாக நாம் முன்வைத்த இந்த சமஷ்டி முறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் சுவிர்ஸர்லாந்தில் இருந்து நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு கலந்தாலோசித்த பின்னரே குறித்த முடிவை இறுதியாக எடுத்திருந்தோம் என அவரிடம் தெரிவித்திருந்தேன்.
நான் கூறியதை ஏற்றுக் கொண்ட அவர், இத்தகைய தீர்வுத் திட்டத்தை பெரும்பான்மை இனத்தவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரியவில்லையே எனத் தெரிவித்திருந்தார்.
நீங்கள் குறிப்பிடுவது உண்மையென அவரிடம் தெரிவித்த நான், அரசியல்வாதிகள் சமஷ்டியை பிரிவினைவாதமாகக் கூறியதனாலேயே இத்தகைய நிலைப்பாடு அவர்களிடம் உருவாகியுள்ளது. உண்மையில் நாங்கள் சமஷ்டியைக் கோருவது நாட்டை ஒற்றுமைப்படுத்தி வைத்திருக்கவே. ஆனால் அதனை பிரிவினைவாதமாகத் பிரச்சாரம் செய்யப்படுவதே பிரச்சினையாக உள்ளது என்பதை வெளிவிவகார அமைச்சரிடம் கூறினேன்.
இறுதியாக வெளிநாட்டு அரசாங்கம் என்ற முறையில் எங்களுடைய பங்கு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை எதிர்பார்க்கிறீர்கள் என அவர் என்னிடம் கேள்வி முன்வைத்தார்.
வெளிநாட்டு அரசினுடைய பங்களிப்பு இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில் நாம் மேலும் பாதிக்கப்பட்டுவிடுவோம். மேலும் ஜெனீவாத் தீர்மானங்கனை அரசாங்கம் கடைப்பிடிப்பதற்கு வெளிநாட்டு அரசுகளுடைய நெருக்குதல்களும் நல்லெண்ணங்களும் அறிவுரைகளும் எமக்கு நன்மைபயத்தது என அவரிடம் தெரிவித்திருந்தேன் எனக் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM