சர்­வ­தேச பயங்­க­ர­வாத  எதிர்ப்பு தினமும் இலங்­கையும்

Published By: Digital Desk 3

21 May, 2019 | 10:11 AM
image

சர்­வ­தேச தினங்கள் கொண்­டா­டப்­ப­டு­வது குறித்த விட­யத்தை மக்­க­ளுக்குத் தெளி வு­ப­டுத்தல், அதன் முக்­கி­யத்­து­வத்தைப் புலப்­ப­டுத்தல், அதன்பால் கவ­ன­யீர்ப்பை ஏற்­ப­டுத்தல் என்­ப­ன­வாகும். இத­ன­டிப்­ப­டையில் சர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினம் ஒவ்­வொரு ஆண்டும் மே மாதம் 21 ஆம் திகதி கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

மனித உயிர்கள், சொத்­துக்­களை அழித் தல் மற்றும் மனித நேயத்­திற்கு எதி­ரான அனைத்து செயற்­பா­டு­களும் பயங்­க­ர­வா­ த­மாகும். இது மனித உரு­வாக்­கத்தில் இருந்து ஆரம்­ப­மா­னாலும் இன்று உலகில் மிகவும் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளது ஏனெனில் அன்­றைய பயங்­க­ர­வாதம் பொறாமை, வஞ்­சகம், மத­வெறி, கோபம் மற்றும் மனித நேய­மற்ற தன்­மை­யாலும் ஏற்­பட்­டது. ஆனால் இன்று இவற்­றுக்கும் அப்பால் பல கார­ணிகள் சேர்ந்து பயங்­க­ர­வாதம் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளது.

 பயங்­க­ர­வா­தத்தை எந்த மதமும் ஆத­ரிக்­க­வில்லை. மாறாக எதிர்க்­கின்­றது. மேலும்   மனித நேய­முள்­ள­வர்கள் பயங்­க­ர­வாத செயற்­பாட்டில் ஈடு­ப­டவும் மாட்­டார்கள் அதற்கு ஆத­ரவு வழங்­குவும் மாட்­டார்கள் மாறாக அதனை எதிர்ப்­ப­வர்­க­ளாக இருப்­பார்கள். இன்று பயங்­க­ர­வாதம் பல கோண ங்­களில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. சில பல ­மிக்க நாடுகள் உலகில் தமது ஆதிக்கம் தொடர வேண்டும் என்­ப­தற்­காக பலம் குன்­றிய நாடு­களில் பயங்­க­ர­வா­தத்தை தோற்­று­விக்­கின்­றன. அதே போன்று சில நாடுகள் தமது ஆயு­தங்கள் விற்­பனை செய்­யப்­பட வேண்டும் என்­ப­தற்­காக பயங்­க­ர­வா­தத்­திற்கு ஊக்­க­ம­ளிக்­கின்­றன. மேலும் மத­வாதம், அர­சியல் என்­ப­வற்­றுக்­கா­கவும் பயங்­க­ர­வாதம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.  பயங்­க­ர­வாதம் எந்த வழி­யிலோ வடி­விலோ வந்­தாலும் அதிகம் பாதிக்­கப்­ப­டு­ப­வர்கள் அப்­பாவி மக்கள் என்­பது உல­க­றிந்த விட யம். இதற்­கா­கத்தான் ஐக்­கி­ய­நா­டுகள் சபை மக்­க­ளுக்கு தெளிவு­ப­டுத்­தவும்  பயங்­க­ர­வா­தத்தில் சிக்­காமல் தடுப்­ப­தற்­கா­கவும், உல கில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் சர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினத்தை  ஏற்­ப­டுத்­தி­யது. 

இன்று உலகில் பயங்­க­ர­வாதம் இல்­லாத நாடுகள் மிக­மிகக் குறைவு. அந்த வகையில்   பயங்­க­ர­வா­தத்தால் பாதிப்­ப­டைந்த நாடு­களில் இலங்­கையும் அடங்கும் 30 வருட யுத்­தத்தில் இருந்து விடு­பட்டு 10 வரு­டங் கள் நிம்­ம­தி­யாக வாழ்ந்த இலங்கை மக் கள் சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்தால் கடந்த 2019.04.21 ஆம் திகதி மீண்டும் பயங்­க­ர­வாத பாதிப்பை எதிர் நோக்­கினர். ஒரு தூய மதத்தின் பெயரை போர்­வை­யாக ஆக்கிக் கொண்ட ஒரு குழு­வினர் சகோ­தர மதத்­தி­னரை அவர்­களின் வழி­பாட்டுத் தலத்தில் வைத்து அவர்­களின் புனித நாளான உயிர் த்த ஞாயிறு அன்று மேற்­கொண்ட தாக்­குதல் மற்றும் உல்­லாச உண­வக விடு­தி­க ளில் மேற்­கொண்ட தாக்­குதல் மிகவும் மிலேச்­சத்­த­ன­மா­ன­தாகும். இதனால் ஏறக்­கு­றைய 250அப்­பாவி மக்கள் உயி­ரி­ழந்­த­துடன் சுமார் 500க்கும் மேற்­பட்டோர் காய­ம­டைந்­துள்­ளனர். இதில் பெண்கள், சிறு­வர்­களும் அடங்­குவர். இந்த செயற்­பாட்டை இலங்கை வாழ் முஸ்­லிம்கள் அன்றி உலக   முஸ்­லிம்­களும் வெறுத்­தனர். இதனை உண்­மை­ப்ப­டுத்தும் முக­மாக இலங்கை முஸ்­லிம்கள் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளுக்கு அரச படை­யி­ன­ருக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­னா­ர்கள். இதற்கு சிறந்த உதா­ரணம்  பயங்­க­ர­வா­திகள் சாய்ந்­த­ம­ருதில் தங்­கி­யி­ருந்த இடத்­தினை படை­யி­ன­ருக்கு அறி­வித்து 2019.04.26 ஆம் திகதி பயங்­க­ர­வா­திகள் தங்­கி­யி­ருந்த இடம் இரா­ணு­வத்தால் கைப்­பற்­றப்­பட்­ட­துடன் அதில் பயங்­க­ர­வா­தி­களும் உயி­ரி­ழந்­துள்­ளனர்.   

இவ்­வா­றான ஒரு சூழலில் மேலும் ஒரு பயங்­க­ர­வா­தத்தை 2019.05.13 ஆம் திகதி பெரும்­பான்மை பௌத்த மக்­களின் ஒரு குழு­வினர் முஸ்­லிம்கள் மீது ஏற்­ப­டுத்தி முஸ்­லிம்­களின் சொத்­துக்கள், மதஸ்­த­லங் கள் என்­ப­வற்றை அழித்­தனர். இதன் பின்­ன­ ணியில் மதப் பயங்­க­ர­வாதம், அர­சியல் பயங்­க­ர­வாதம் என்­பன காணப்­ப­டு­கின்­றன. இதன் மூலம் பயங்­க­ர­வாதம் ஆத­ர­வ­ளிக்­கப்­ப­டு­கின்­றதே ஒழிய அழிக்­கப்­ப­ட­வில்லை. முஸ்லிம் பெயர் தாங்­கிய ஒரு குழு­வினர் சகோ­தர மத கிறிஸ்­தவ மக்­களை தாக்­கிய போதும் அம்­மக்கள் பொறுமை காத்து நாட்டில் ஒரு இன பயங்­க­ர­வா­தத்தை ஏற்ப­டுத்­தாமல் சமா­தா­னத்­திற்கு ஆத­ர­வ­ளித்து பயங்­க­ர­வா­தத்­திற்கு தமது எதிர்ப்­பினை காட்­டினர். இச் செயற்­பா­டா­னது மிகச் சிறந்த மனித நேயத்தை உல­குக்கு காண்­பித்­தது. இந்த வகை­யில் கிறிஸ்­தவ மதத்தின் தலை­வர்­களும், மக்­களும் பாராட்­டப்­பட வேண்­டி­ய­வர்கள்.

ஆனாலும் மிகத் துய­ர­மான விடயம் என்­ன­வென்றால் முஸ்­லிம்­களின் புனி­த­மான ரமழான் மாதத்தில் பெரும்­பான்மை பௌத்த மக்­களின் ஒரு குழு­வினர் முஸ்­லி ம்­களை கஷ்­டத்­திற்கு உள்­ளாக்­கு­வது  மிக வும் வேத­னை­யான விட­ய­மாகும்.  இவ் விட­யத்தில் அர­சாங்கம் மற்றும் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் கவனம் செலுத்த வேண்டும். 

சர்­வ­தேச பயங்­க­ர­வாத எதிர்ப்பு தினத்தில் உலகில் ஒவ்­வொரு பிர­ஜையும் பயங்­க­ர­வா­தத்தை எதிர்க்க வேண்டும் அது எந்த சம­யத்­திலோ, மதத்­திலோ, கட்­சி­யிலோ, இயக்­கத்­திலோ இருந்து தோன்­றி­னாலும் அவை தண்­டிக்­கப்­பட வேண்டும். விசே­ட­மாக இலங்­கையின் தேசிய பாது­காப்­புக்கு அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். பயங்­க­ர­வாத எதிர்ப்­புக்­காக அர­சினால் அமுல்­ப­டுத்­தப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்கி பயங்­க­ர­வா­தத்தை அழிக்க வேண்டும். ஊர­டங்குச் சட்டம், அவ­ச­ர­காலச் சட்டம் போன்­ற­வற்­றுக்கு மதிப்­ப­ளித்து மக்கள் பொறு­மை­யுடன் நடந்து கொள்ள வேண்டும். அதே போன்று மேற்­படி சட்­டங்கள் அமுலில் உள்ள போது பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடு­படும் அனை­வ­ரையும் மத, இன தரா­தரம் பாராமல் தண்­டிக்க வேண்­டி­யது அரச படையின் பொறுப்­பாகும். மாறாக பாராமுக­மாக இருத்தல் பயங்­க­ர­வா­தத்தை ஊக்­கு­விப்­ப­தாகும். இவ்­வாறே அர­சியல் வாதிகள், மத போத­கர்கள் இன முரண்­பா­டான கருத்­துக்­களை தெரி­விப்­பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்­லா­விட்டால் மதங்­க­ளுக்­கி­டையே வன்­மு­றைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் ஊக்­கு­விக்­கப்­படும்.

பயங்­க­ர­வா­தத்தை தூண்டும் வேலை­ களை தற்­போது சமூக வலைத்­த­ளங்­களில் சில மேற்­கொண்டு வரு­கின்­றன. இதனால் இலங்­கையில் பாரிய இன வன்­மு­றை­களை நாம் அனு­ப­வித்து வரு­கின்றோம். இச் செயற்­பா­டா­னது பயங்­க­ர­வா­தத்­திற்கு வழி­கோறக் கூடி­ய­தாகும். அதே போன்று சில ஊட­கங்கள் ஊடக தர்­மங்­களை மீறி தமது பிர­பல்­யத்­திற்­காக பயங்­க­ர­வாதச் செயற்­பாட்டின் விளை­வாக ஏற்­பட்ட பாதிப்­புக்­களை அடிக்­கடி மக்­க­ளி­டையே ஒளி, ஒலி பரப்பி சாதாரண மக்களின் மனங்களில் பயங்கரவாத உணர்வுகளை ஏற்படுத்தி பயங்கரவாதத்திற்கு துணை புரிகின்றன. இவ்வாறு இல்லாமல் மக்களுக்கு உரிய முறையில் தகவல்களை வழங்கி பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஊடகங்கள் செயற்பட வேண்டும் 

இவ்வாண்டின் சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு தினத்தில் இவ் உலகம் விசேடமாக இலங்கை பயங்கரவாதம் அற்ற ஒரு சுவர்க்க பூங்காவாக மிளிர வேண்டும். இதற்காக மேற்கூறிய அனைவரும் இதய சுத்தியுடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை அழித்து சமாதானத்தை ஆதரிப்போம். இதற்கு எல்லோருக்கும் பொதுவான இறை வன் துணை புரிய வேண்டும்.

(ஒருவரை வாழ வைத்தவன் உலகையே வாழ வைத்தவன் ஆவான்)

ஒலுவில் இஸட்.ஏ.றஹ்மான்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04