உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (ஏப்ரல் 21-2019) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்காக 31ஆம் நாள் அஞ்சலியும், திருப்பலியும் ஆத்ம சாந்திப் பூசையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான த. சிவநாதன் அறிவித்துள்ளார்.
ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுகளில் உயிர்நீத்த உறவுகளின் குடும்பத்தார்கள், அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் நண்பகல் 12.00 மணியளவில் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மசாந்தி பூசையும் நடைபெறவுள்ளது.
அத்துடன் அன்னதானமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM