அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மின்னல் தாக்கி காஞ்சிரம்குடா ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதுடன் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.
திருக்கோவில் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (17) பலத்த காற்றுடன் மழை பெய்ததுடன் மின்னல் தாக்கமும் அதிகமாகக் காணப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிரம்குடா பாலத்தடியில் மீன் விற்றுக் கொண்டிருந்த ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17வயதுடைய ராஜகுமார் எனும் சிறுவன் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளான்.
இதேவேளை விநாயகபுரம், காஞ்சிரம்குடா ஆகிய கிராமங்களில் பலத்த காற்று காரணமாகப் பல வீடுகளின் கூரைகளும் சேதமடைந்துள்ளன.
குறித்த சிறுவனின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM