மின்னல் தாக்கி சிறுவன் பலி 

Published By: Digital Desk 4

17 May, 2019 | 09:29 PM
image

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மின்னல் தாக்கி காஞ்சிரம்குடா ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17வயது சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளதுடன் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.

திருக்கோவில் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (17) பலத்த காற்றுடன் மழை பெய்ததுடன் மின்னல் தாக்கமும் அதிகமாகக் காணப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிரம்குடா பாலத்தடியில் மீன் விற்றுக் கொண்டிருந்த ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17வயதுடைய ராஜகுமார் எனும் சிறுவன் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளான்.

இதேவேளை விநாயகபுரம், காஞ்சிரம்குடா ஆகிய கிராமங்களில் பலத்த காற்று காரணமாகப் பல வீடுகளின் கூரைகளும் சேதமடைந்துள்ளன.

குறித்த சிறுவனின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21
news-image

வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு...

2024-04-17 18:20:18