யாழில் அதிரடிப்படையினரால் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு

Published By: R. Kalaichelvan

17 May, 2019 | 05:56 PM
image

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றை தமது உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வெளி மாகாணங்களுக்கான பஸ் தரிப்பிடத்துக்கு முன்பாகவுள்ள கட்டடத்தில் இந்த மதுபானங்கள் இன்று பிற்பகல் சிறப்பு அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டன.

“வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று தொடக்கம் 4 நாள்களுக்கு மதுபானசாலைகளை பூட்டுவதற்கு மதுவரித் திணைக்களம் கட்டளையிட்டது.

இந்த நிலையில் சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான மதுபானப் போத்தல்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக  கிடைத்த தகவலின் அடிப்படையில் பண்ணை பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள கட்டடம் சிறப்பு அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்டது.

அங்கு மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் அவை மீட்கப்பட்டன. அதனை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 

அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் முளவைப் பகுதியைச் சேர்ந்தவர். மற்றொருவர் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்” என சிறப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33