(ச.லோக தர்ஷினி)
இன்றைய உலகின் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து வாழவேண்டிய கட்டாயத்திலேயே மனிதன் உள்ளான். உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் மிகமுக்கிய இடத்தை தொடர்பாடல் துறை பிடித்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு, உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்படுகின்றது. 1969 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆண்டுதோறும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. அத்தோடு, 1855 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி சர்வதேச டெலிகிராப் மாநாடு பாரிஸில் கையெழுத்திட்டமையும் குறிப்பிடதக்கது.
தொலைத்தொடர்பாடல் துறையின் தோற்றப்பாட்டை எடுத்து நோக்குவோமானால், ஆரம்பகால மனிதன் சைகை, புறாக்கள், முரசு கொட்டுதல், தூது விடுதல் போன்ற முறைகளினால் ஓர் இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு தகவல்களை வழங்கினான். பின்னர் சற்று வளர்ச்சிப்பெற்று, கடிதம், தந்தி, மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் கணனி என அதன் வளர்ச்சியை நீடித்துக்கொண்டான்.
அந்தவகையில், தொழில்நுட்ப வளர்ச்சியின் முதல் அங்கமாக, 1450 ஆம் ஆண்டு, ஜேர்மனியைச் சேர்ந்த யொகான் குட்டன்பெர்க் என்பவரால் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு ஆரம்பித்த பத்திரிகையின் வடிவம் சற்றே விரிவடைந்து, கிரஹாம்பெல்லால் கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசி தொடர்பாடலாக வளர்ச்சிக் கட்டத்தை எட்டியது.
பின்னர் இத்தொலைதொடர்பானது, வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கையடக்கத்தொலைபேசி, மின்நகல், மின்னஞ்சல், இணையம், 3G கைப்பேசி, செய்மதித் தொடர்புகள் என்பன நவீன தொலைத்தொடர்பு சேவைக்குள் உள்வாங்கப்பட்டு, தற்போதைய விஞ்ஞான உலகில் மனிதனோடு, மனிதனாக உலா வருகின்றன.
தொழிநுட்பத் தொலைத்தொடர்பு வளர்ச்சியின் படிநிலைகளை எடுத்து நோக்கினால், இணையம் மிக முக்கிய அங்கமாக கருதப்படுகின்றது. எமக்குத்தேவையான சகல சந்தேகங்களை தீர்த்து வைக்கின்ற ஓர் ஆசானாகவும், உலகளாவிய ரீதியிலான தகவல் பரிமாற்றத்தினை மிக இலவகுவாக மேற்கொள்ளக்கூடிய தொழில்நுட்ப மையமாகவும் இவ்விணையம் தொழிற்படுகின்றது.
இன்றைய உலகின், ஒவ்வொரு நாடுகளின் பொருளாதார வளச்சியிலும், தனிமனித வளர்ச்சியிலும், மனிதனோடு மனிதனாக பிணைந்துள்ளதோர் விடயமாகவும், உலகில் ஏதோ ஒரு மூளையில் இருந்துகொண்டு, நமது விரல் நுனிக்குள் விடயங்கள்அனைத்தையும் கொண்டு வருவதங்கான சிறந்ததோர் யுக்தியாகவும் இத்தொலைத்தொடர்பு காணப்படுகின்றது.
இதேவேளை இத்தொலைத்தொடர்புகள் மனித வாழ்வை மேம்படுத்தும் அதேவேளை, தவறான உபயோகத்தின் விளைவாக பல தீமைகளையும் எமக்கு தருகிறது. இணையமோ, தொலைத்தொடர்புகளோ மனித வாழ்வை மேம்படுத்துவதற்காகவே தவிர, சீரழிப்பதற்காக அல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர்வு ரீதியாக அறிந்து செயற்படவேண்டியது அவசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM