பிரான்ஸ் நாட்டில் உள்ள ஈபிள் டவர் திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து டவரில் 12 நிமிட வண்ணமயமான லேசர் விளக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரான்சின் அடையாளங்களில் ஒன்று ஈபிள் டவர். பிரான்ஸ் புரட்சியை நினைவுப்படுத்தும் விதமாக 1889 இல் கஸ்டேவ் ஈபிள் என்பவரால் குறித்த டவர் கட்டப்பட்டது.
324 மீற்றர் உயரம் கொண்ட இந்த டவரை கட்டி முடிக்க 2 ஆண்டுகளும் 2 மாதங்கள் ஐந்து நாட்கள் எடுத்தது. இதன் மொத்த எடை 7,300 டொன்.
இன்றுவரைக்கும் ஒவ்வொரு வருடமும் 7 மில்லியன் சுற்றுலாவாரசிகள் ஈபிள் டவரை பார்வையிட வருகின்றார்கள்.
கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் ஈபிள் டவர் 6 இன்ச் வளர்கிறது என்றும் குளிர்காலங்களில் அதே அளவு சுருங்குவதாகவும் கூறுகின்றனர்.
காற்று பலமாக வீசும் போது டவரின் உச்சிப் பகுதி 6 லிருந்து 7 மீற்றர் வரை முன்னும் பின்னும் அசையும். உலக அதிசயமாக திகழும் இக்கோபுரத்தை இடிக்குமாறு இரண்டாம் உலகப் போரின் போது பிரான்ஸ் ஆளுனருக்கு ஜேர்மன் ஜனாதிபதி ஹிட்லர் உத்தரவிட்டார். இந்நிலையில் அந்த ஆளுநர்அவர் மறுத்து விட்டார்.
இக்கோபுரம் கட்டப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை பிரான்ஸ் அரசு நேற்று கொண்டாடியது. ஈபிள் டவரில் வண்ணமயமான லேசர் விளக்கு நிகழ்ச்சியை பலர் ஆர்வமாக கண்டு இரசித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM