கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர் ஹெரோயினுடன் கைது!

Published By: Vishnu

16 May, 2019 | 08:37 AM
image

வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் நேற்றிரவு ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவரைக் கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கடந்த மாதம் கேளரா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தண்டனை பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவு பொலிசார் நேற்று இரவு பண்டாரிகுளம் பகுதியில் சென்ற ஒருவரை சோதனைக்குட்படுத்தியபோது அவரது உடமையிலிருந்து ஒரு கிராம் 240 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர். 

குறித்த நபர் பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள பாடசாலைக்கு முன்பாக உள்ள வியாபார நிலையத்தில் வைத்து கடந்த மாதம் கேரளா கஞ்சா பொதியுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தண்டனை பெற்றுள்ளார். என்பது பொலிசாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51