வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் நேற்றிரவு ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவரைக் கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கடந்த மாதம் கேளரா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தண்டனை பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவு பொலிசார் நேற்று இரவு பண்டாரிகுளம் பகுதியில் சென்ற ஒருவரை சோதனைக்குட்படுத்தியபோது அவரது உடமையிலிருந்து ஒரு கிராம் 240 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
குறித்த நபர் பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள பாடசாலைக்கு முன்பாக உள்ள வியாபார நிலையத்தில் வைத்து கடந்த மாதம் கேரளா கஞ்சா பொதியுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தண்டனை பெற்றுள்ளார். என்பது பொலிசாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
நேற்றைய தினம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM