எமது கருத்தை பொருட்படுத்தாது அரசியல் தலைவர்கள் செயற்படுவது கவலையளிக்கிறது - மகாநாயக்க தேரர்கள்

Published By: Digital Desk 3

15 May, 2019 | 04:50 PM
image

(செ.தேன்மொழி)

நாட்டின் மகாநாயக்க தேரர்கள் என்ற வகையில் நாங்கள் பல ஆலோசனைகளை முன்வைத்தாலும், அவற்றை பொருட்படுத்தாமல் அரசியல் தலைவர்கள் செயற்படுவது கவலையளிக்கிறது என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் தெரிவித்துள்ளன.

அஸ்கிரிய பீடத்து மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர் , அமரபுர பீடத்து மாநாயக்கர் கொடுகொட தம்மாவாச தேரர் மற்றும் ஸ்ரீலங்கா இராமாண்ய  பீடத்து மாநாயக்கர் நாபால பிரேமசிறி தேரர் ஆகியோரின் கையெழுத்துடன் தேரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல் தலைவர்கள் நாட்டை பற்றி சிந்திக்காது அவர்களின் வாக்குகளை பெருக்கிக் கொள்ளும் நோக்கிலான செயற்பாடுகளில் ஈடுப்படுவதன் விளைவுகளையே  இன்று நாடு அனுபவிக்கின்றது . நாட்டுக்குள் அமைதியை ஏற்படுத்துவது ஆளும் கட்சியினதும், எதிர்கட்சியினதும் பொறுப்பாகும். ஆனால் இவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காக அந்த பொறுப்பிலிருந்து மீறி செயற்படுகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமையில் பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் இது சிங்கள பௌத்தர்களின் நாடல்ல என குறிப்பிட்டிருப்பது வன்முறையை ஊக்குவிக்க கூடும். இந்நிலைமை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது  போன்றதாகும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாகண்டலில் சட்டவிரோத கசிப்புடன் மூவர் கைது...

2025-02-16 17:29:04
news-image

இராணுவ வீரர்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்குமாறு...

2025-02-16 16:51:10
news-image

ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் தமிழ்மொழிமூலமான பயிற்சி...

2025-02-16 17:03:00
news-image

ஐ.தே கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து...

2025-02-16 16:08:26
news-image

அஹுங்கல்லவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர்கள் இருவர்...

2025-02-16 16:52:43
news-image

பொகவந்தலாவை பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில்...

2025-02-16 16:38:47
news-image

விளையாட்டுத்துறை அமைச்சர் யாழுக்கு விஜயம்

2025-02-16 16:40:07
news-image

விஜயகுமாரணதுங்கவின் 37 ஆவது சிரார்த்த தினம்

2025-02-16 16:25:55
news-image

மூத்த ஊடகவியலாளர் சீதா ரஞ்சனி காலமானார்

2025-02-16 16:26:56
news-image

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பிரபல போதைப்பொருள்...

2025-02-16 15:51:07
news-image

விவசாயிகளைப் போன்று நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையிலேயே...

2025-02-16 15:32:21
news-image

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன்...

2025-02-16 14:29:48