(செ.தேன்மொழி)
நாட்டின் மகாநாயக்க தேரர்கள் என்ற வகையில் நாங்கள் பல ஆலோசனைகளை முன்வைத்தாலும், அவற்றை பொருட்படுத்தாமல் அரசியல் தலைவர்கள் செயற்படுவது கவலையளிக்கிறது என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் தெரிவித்துள்ளன.
அஸ்கிரிய பீடத்து மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த தேரர் , அமரபுர பீடத்து மாநாயக்கர் கொடுகொட தம்மாவாச தேரர் மற்றும் ஸ்ரீலங்கா இராமாண்ய பீடத்து மாநாயக்கர் நாபால பிரேமசிறி தேரர் ஆகியோரின் கையெழுத்துடன் தேரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
அரசியல் தலைவர்கள் நாட்டை பற்றி சிந்திக்காது அவர்களின் வாக்குகளை பெருக்கிக் கொள்ளும் நோக்கிலான செயற்பாடுகளில் ஈடுப்படுவதன் விளைவுகளையே இன்று நாடு அனுபவிக்கின்றது . நாட்டுக்குள் அமைதியை ஏற்படுத்துவது ஆளும் கட்சியினதும், எதிர்கட்சியினதும் பொறுப்பாகும். ஆனால் இவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காக அந்த பொறுப்பிலிருந்து மீறி செயற்படுகின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமையில் பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் இது சிங்கள பௌத்தர்களின் நாடல்ல என குறிப்பிட்டிருப்பது வன்முறையை ஊக்குவிக்க கூடும். இந்நிலைமை எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM