சுரங்க அறையில் பதுங்கியிருந்த மூவர் கைது : பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பு

Published By: Daya

11 May, 2019 | 12:17 PM
image

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட மூன்று சந்தேகநபர்களை வெலிமடைப் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வீட்டிற்கு அடியிலிருந்த சுரங்க அறையிலிருந்து குறித்த மூவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிமடைப் பகுதியின் போகாகும்பரை என்ற இடத்தில் முஸ்லீம் ஒருவருக்கு சொந்தமான வீட்டின் அடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்க அறையில் பதுங்கியிருந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டடுள்ளனர். 

போகாகும்பரை  மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே, குறிப்பிட்ட வீடு இன்று சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. 

குறித்த வீட்டின்  படுக்கையறையின் வீட்டின் தரையில் சுரங்க அறையொன்று அமைக்கப்பட்டு, மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

 பொலிசாஸாரும், இராணுவத்தினரும் இச் சுரங்க அறையைக் கண்டுபிடித்து, அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

இந்நிலையில் அங்கு பதுங்கியிருந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட இம் மூவரும், பொலிஸாராலும், இராணுவத்தினராலும் தேடப்பட்டு வந்தவர்களென்று ஆரம்பகட்ட  விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பொலிஸாரும், இராணுவத்தினராலும் கைதுசெய்யப்பட்ட மூவர் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 குறிப்பிட்ட சுரங்க அறையிலோ, வீட்டிற்குள்ளோ எவ்வித பயங்கரவாதப் பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லையென பொலிஸாரும், இராணுவத்தினரும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43