நாட்டின் பாதுகாப்பிற்காக பொலிஸ் வாகனங்களை வழங்கிய சீனா

Published By: Daya

09 May, 2019 | 12:35 PM
image

நாட்டின் பாதுகாப்பிற்காக அரசாங்கத்திற்கு 10 பொலிஸ் வாகனங்கள் சீனா வழங்கியுள்ளதாக Xinhua செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஓரங்கமாக இந்த வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இலங்கைக்கான சீன தூதர் செங் ஜுய்யுவான் இந்த வாகனங்களை கையளித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தவும் குறித்த வாகனங்கள் தமக்கு உதவும் என தெரிவித்த ஜனாதிபதி சரியான நேரத்தில் உதவுவதற்காக சீனாவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். 

அத்தோடு இலங்கை பொலிஸார் மக்களுக்கு ஆற்றும் பங்களிப்புக்காக நன்றி தெரிவித்த சீன தூதர், இலங்கையில் மேலதிக நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09