கஞ்சிபானை இம்ரான் மீதான 27 குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

Published By: Vishnu

08 May, 2019 | 10:53 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் பிரபல பாதாள உலக குழு உறுப்பினரான கஞ்சிபானை இம்ரான் எனப்படும் மொஹம்மட் நஜீம் மொஹம்மட் இம்ரான் உள்ளிட்ட மூவர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவில் கஞ்சிபானை இம்ரான் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி நீதிவான் இட்ட கட்டளைக்கு அமைய அவர் மேற்பார்வைக்காக நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார்.  

அத்துடன் இம்ரானுடன் சேர்த்து சி.சி.டி. தடுப்பில் உள்ள புள்ளப்பழம் அஜ்மி எனப்படும் மொஹம்மட் அஜ்மி மற்றும் அபூபக்கர் மொஹம்மட் பதுர்தீன் ஆகிய இம்ரானின் இரு சகாக்களும் மன்றில் ஆஜர்செய்யப்பட்டனர். 

இதன்போது கஞ்சிபானை இம்ரானுக்கு எதிராக 27 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.

இந் நிலையில் குறித்த மூவரையும் எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி மன்றில் ஆஜர்செய்யுமாறு நீதிவான் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08