சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற, 180 அரிய வகை சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, 6 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு அரிய வகை கடல் பொருட்கள் கடத்தப்படுகிறது’ என, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னையைச் சேர்ந்த ஜமீல் உசேன் (46), யூனுஸ் (37), நூர் முகமது (32), அலாவுதீன் (38), நாகூர் மீரான்(32) உள்ளிட்ட 6 பேர் குழுவாக சிங்கப்பூர் செல்ல வந்திருந்தனர். இவர்கள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், 6 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசவே, அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது, அரிய வகையான பச்சை நிற சங்குகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் இந்த அரிய வகை பச்சை நிற சங்குகளில் ஒன்று மட்டும், சிங்கப்பூரில் 50 டொலர் வரை விலை போகும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, 6 பேரிடம் இருந்த 180 சங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, 6 பேரிடமும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM