திருக்கோவில் தம்பிலுவிலில் உள்ள வீட்டில் வைத்து நேற்று காலை இனம் தெரியாதவர்களினால் ஜீப் ஒன்றில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட, புனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய புலிகளின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் என்பவர் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் தம்பிலுவிலில் உள்ள அவரது வ வீட்டில் வைத்து நேற்று காலை 8.30 மணியளவில் நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த சிலரால், தனது கணவர் கடத்தப்பட்டதாக அவரது மனைவி சுதாராணி திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினராலே அவர் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.
விடுதலைப் புலிகளின் அம்பாறைமாவட்ட தளபதியாக இருந்து 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் திருகோணமலையில் வைத்து கைதுசெய்யப்பட்டு பின்னர் 2013 ஆம் ஆண்டு விடுதலையானார்.
அதன் பின்னர் திருமணம் முடித்து திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்துவருவதுடன் விவசாயம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM