கடந்த உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற கொடூர தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் உள உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மனச் சாந்தி வேண்டி புன்னிய கருமங்களில் ஈடுபட வேண்டும் என்பதுடன் புனித வெசாக் தினத்தில் தேவையற்ற களியாட்டங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் மகாநாயக்க தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேற்படி வேண்டுகோளை மல்வத்தை மகாநாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த, சுமங்கள, அஸ்கிரிய மகாநாயக்கத் தேரர் வண. வரகாகொட ஞானரத்ன, அமரபுர நிகாயாவின் மகாநாயக்கத் தேரர் வண. கொட்டுகொட தம்மாவாச, ராமன்ய நிகாயாவின் மகாநாயக்க தேரர் நாப்பான பேமசிரி ஆகியோர் ஒன்றிணைந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வெசாக் தினம் என்பது உலக பௌத்தர்களுக்கு மிக முக்கிய தினமாகும். இது கௌத்தம புத்தரின் பிறப்பு, புனித துறவரம் அடைதல், பரிநிர்வாணமடைதல் போன்ற நிகழ்வுகள் நடந்த தினமாகும்.
கடந்த 21ம் திகதி இடம் பெற்ற தாக்குதல் காரணமாக மனதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல சித்த சக்தி கிடைக்க வேண்டும் என பிராத்திக்க வேண்டும் என்றும் வேண்டப்பட்டுள்ளது.
துவேசம், பயம், மோகம் போன்ற துர்குணங்களைத் தவிர்ந்து கருணை, காருன்யம், அன்பு போன்ற நற்குணங்களை உருவாக்கும் எதிர்பார்க்கை பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.
சமய சிந்தனை ஆத்மீகம் தொடர்பான நடவடிக்கைளில் அமைதியாக ஈடுபடுவதுடன் பொது சனங்களை ஒன்று திரட்டும் வேலைத்திட்டங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM