4 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தீ வைத்து அழிப்பு!

Published By: Vishnu

05 May, 2019 | 09:08 AM
image

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்ற சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 296 கிலோ கேரளக் கஞ்சா போதைப் பொருள் எரித்து அழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியில் 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கைப்பற்றப்பட்ட இந்த கஞ்சா போதைப்பொருள்கள் தொடர்பாக 2018 மற்றும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நிறைவடைந்த நிலையில் சான்றுப்பொருள்களான கஞ்சா போதைப்பொருளை எரியூட்டி அழிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய நீதிமன்றப் பதிவாளரின் ஏற்பாட்டில் மேல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் 296 கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் உள்ள வெற்றுக் காணியில் எரியூட்டப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16