இந்தியா, கேரளாவில் தாய்ப்பாலுக்காக அழுத குழந்தையை வாயை மூடிக்கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டினங்காடு காலனியை சேர்ந்த ஷரோன் – ஆதிரா தம்பதிக்கு ஆதிஷா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 30ஆம் திகதி இரவு குழந்தை ஆதிஷா கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து போனதாக கூறி தாய் ஆதிரா, கதறி அழுதுள்ளார்.
ஆனால் குழந்தை உடலில் எந்தவொரு காயமும் இல்லாததாலும், குழந்தை மூச்சு திணறி இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்ததாலும் இது தொடர்பாக பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
பொலிசார் ஆதிராவை விசாரித்த போது இரவு 12.30 மணிக்கு நான் தொலைபேசியில், வாட்ஸ் அப் மூலம் தோழியிடம் இணைப்பிலிருந்தேன்.
அப்போது குழந்தை பாலுக்கு அழுதது. கொஞ்ச நேரம் கழித்து பால் கொடுக்கலாம் என குழந்தையை தட்டி கொடுத்த போதும் அழுகையை நிறுத்தாமல் இன்னும் சத்தமாக அழுதது.
உடனே சத்தம் வெளியே கேட்காமல் இருக்க குழந்தையின் வாயை பொத்தியபடியே வாட்ஸ் அப்பில் மூழ்கியிருந்ததால் குழந்தை இறந்து விட்டதெனக் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM