கோத்தாவை அமெரிக்காவில் கைது செய்வதற்கு இடமளியோம் அரசாங்கம் தெரிவிப்பு.!

Published By: Robert

25 Apr, 2016 | 08:54 AM
image

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை அமெரிக்க அரசாங்கம் கைதுசெய்ய எமது அரசாங்கம் அனுமதி கொடுக்காது. எந்த குற்றமாக இருந்தாலும் அல்லது குற்றச்சாட்டாக இருந்தாலும் அவற்றை எமது சட்டத்தின் பிரகாரம் உள்நாட்டிலேயே விசாரிக்கப்படும். சர்வதேசம் இந்த விடயத்தில் தலையிட எம்மால் அனுமதிக்க முடியாது என அமைச்சர் கபீர் ஹாஸிம் தெரிவித்தார்.

தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கைது செய்யுமாறு இரு தமிழ் அமைப்புகளான தமிழ் ப்போர் ஒபாமா மற்றும் அமெரிக்கன் தமிழ் போரம் ஆகிய இரு அமைப்புகள் அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் அரசாங்கதின் கருத்தினை தெரிவிக்கும் போதே அமைச்சர் கபீர் ஹாஸிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த காலத்தில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவருவதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கும் பங்கு உள்ளது. அவ்வாறு இருக்கையில் இறுதி யுத்தத்தில் 70ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக இந்த அமெரிக்க தமிழ் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. அதேபோல் யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கைதுசெய்ய வேண்டும் எனவும் அவ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த கருத்துக்கு அவர் பதில் கூறுகையில்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை கைதுசெய்யக்கோரி அமெரிக்க தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன என்ற செய்து வெளிவந்துள்ளது. எனினும் அவ்வாறு அவர்களின் கருத்துகளுக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை அமெரிக்க அரசாங்கம் கைதுசெய்ய எமது அரசாங்கம் அனுமதி கொடுக்காது. எந்த குற்றமாக இருந்தாலும் அல்லது குற்றச்சாட்டாக இருந்தாலும் அவற்றை எமது சட்டத்தின் பிரகாரம் உள்நாட்டிலேயே விசாரிக்கப்படும். சர்வதேசம் இந்த விடயத்தில் தலையிட எம்மால் அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03
news-image

பொலன்னறுவையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-03-21 16:32:43
news-image

சர்வாதிகார நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு...

2025-03-21 17:05:15
news-image

உலக வங்கியின் பூகோள டிஜிட்டல் மாநாட்டில்...

2025-03-21 17:09:26
news-image

161 ஆவது பொலிஸ் மாவீரர் நினைவேந்தல்

2025-03-21 16:45:59
news-image

ஓய்வூதியத்தை எதிர்பார்த்திருந்த 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு...

2025-03-21 17:07:00
news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

மது போதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற...

2025-03-21 15:48:13
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49