இலங்கையில் நான் தான் குண்டு வைத்தேன் என சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸ் கட்டுப் பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் இலங்கையில் வெடிகுண்டு வைத்தது நான் தான். தற்போது சென்னை மேட்டுக் குப்பத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன் என தெரிவித்தார்.
அந்த நபர் தொடர்பு கொண்ட தொலைபேசி எண் கோயம்பேடு பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆழ்வார்திருநகர் பகுதியிலிருந்து பேசியிருந்தமை தெரிய வந்த நிலையில் குறித்த மர்ம நபரை கோயம்பேடு பொலிஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு நெற்குன்றம் வள்ளியம்மை நகரைச் சேர்ந்த மிரட்டல் ஆசாமி மைக்கேல் பிரீடி என்பவரை கைது செய்தனர்.
அவர் அளித்த வாக்கு மூலத்தில் நான் அலுமினியம் பேப்ரிகேஷன் வேலை செய்து வருகிறேன். நேற்று முன்தினம் வீட்டில் மனைவியுடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மனைவியுடன் தகராறு ஏற்பட்டது.
உடனடியாக எனது மனைவியிடம் 100 க்கு தொடர்பு கொண்டு உன் மீது புகார் கொடுக்க போகிறேன் என்று கூறிவிட்டு கோபத்துடன் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன். பின்னர் மது அருந்தினேன். டி.வி.யில் இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை தொடர்ந்து பார்த்து வந்ததாலும் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் அடைந்ததாலும் நான் எனது தொலைபேசி மூலம் காவல் கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடி குண்டு வைத்து உள்ளதாக கூறினேன் என்று தெரிவித்தார்.
மேலும் என்னுடைய தொலைப்பேசி எண் பழைய வீட்டின் முகவரியில் இருப்பதால் பொலிஸாசாரால் என்னை பிடிக்க முடியாது என நினைத்தேன் என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM