நாட்டில் அசாதாரண நிலை காணப்படுகின்ற போதிலும் , அதிகாலை வேளை வீதியில் சென்றவரிடம் சங்கிலியை அறுத்துக்கொண்டு கொள்ளையர் ஒருவர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்திற்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பழனியாண்டவர் ஆலய பூசகரின் சகோதரன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் உள்ள குறித்த ஆலயத்திற்கு சென்றுள்ளார்.
அதன் போது , நீள கைசட்டையும் , நீள காற்சட்டையும் அணிந்தவாறு , முகத்தை மறைத்து துணி ஒன்றினை கட்டி தலைக்கவசம் அணிந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் ஆலயத்தின் மேற்கூரையை காட்டி ஏதோ கூரியுள்ளார்.
பூசகரின் சகோதரன் வாய் பேச முடியாதவர் என்பதுடன் அவருக்கு காதும் கேட்காததால் , அவர் அந்நபர் காட்டிய திசையில் பார்த்து அதனை புரிந்து கொள்ள முயற்சித்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளார்.
குறித்த சம்பவத்தால் அப்பகுதியில் காலை வேளை பதட்டம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த நபரின் அசாதாரண நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் ஆலய வீதியிலும் மற்றும் ஆலயத்திற்கு அருகில் உள்ள பூசகரின் வீட்டிலும் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.ரி.வி.கமரா பதிவுகளை கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM