உடலுறவில்...! விளையாட்டு வினையாகிய விபரீதம்

27 Nov, 2015 | 04:59 PM
image

அமெ­ரிக்­கா புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த ட்ரையோன் பீல்ட்ஸ் (21) என்ற இளைஞர் பாலியல் உறவில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த போது தற்­செ­ய­லாக தனது காத­லி கிறிஸ்­டினா மேகரை (18) துப்­பாக்­கியால் சுட்­டுக்­கொன்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 


குறித்த இளைஞர் ட்ரையோன் பீல்ட்ஸ் அமெ­ரிக்க அவ­ச­ர­சேவைப் பிரி­வி­ன­ருக்கு அழைப்பு விடுத்து தான் பெண்­ணொ­ரு­வரின் தலையில் சுட்­டு­விட்­ட­தாக தெரி­வித்துள்ளார். 
இச்­சம்­பவம் ஹோட்டல் அறை­யொன்றிலே இடம்­பெற்­றுள்ளது. உடனே அரு­கி­லி­ருந்த வைத்­தி­ய­சா­லை­க்கு கிறிஸ்­டினா அழைத்துச் செல்­லப்­பட்­ட­போ­திலும் அவர் அங்கு உயி­ரி­ழந்­துள்ளார் என பொலிஸார் தெரி­வித்­தனர்.


கிறிஸ்­டினா தனது தலையில் வேடிக்­கை­யாக துப்­பாக்­கியை வைக்­கு­மாறு ட்ரையோன் பீல்­ஸிடம் கூறி­யுள்ளார் எனவும் அதை­ய­டுத்து துப்­பாக்­கியை கையி­லெ­டுத்த ட்ரையோன் அதன் மெக­ஸினை கழற்றி வைத்துளள்ளார் எனவும் ஆனால், துப்­பாக்­கியின் சேம்பர் பகு­திக்குள் தோட்­டா­வொன்று இருந்­ததை தான் அவ­தா­னிக்­க­வில்லை எனவும் வேடிக்­கை­யாக துப்­பாக்கி விசையை அழுத்­தி­ய­போது அத்­தோட்டா கிறிஸ்­டி­னாவின் தலையை தாக்­கி­யுள்ளது எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் ட்ரையோன் தெரிவித்துள்ளார்.


மேலும் இச்­சம்­பவம் இடம்­பெ­று­வ­தற்கு இரு நாட்­க­ளுக்கு முன்­னரே தானும் கிறிஸ்­டி­னாவும் சந்தித்ததாக ட்ரையோன் பீல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது ட்ரையோனுக்கு எதிராக கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right