கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணு ஆயுத ஒழிப்பு நிகழ வேண்டும் என தான் விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின், கிம்யொங் உன்னிடம் எடுத்துரைத்துள்ளார்.
வடகொரிய ஜனாதிபதி கிம் யொங் உன்னும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் ரஷ்ய துறைமுக நகரான விளாடிவொஸ்டொக்கிற்கு அருகிலுள்ள ரஸ்கி தீவில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதன்போதே புட்டின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனது அணு ஆயுதங்களைக் கைவிட தயாராக இருப்பதாக கிம் ஜொங்-உன் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவித்த பிறகு, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை 4 முறையும், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னை 3 முறையும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை 2 முறையும் அவர் சந்தித்துப் பேசினார்.
இந் நிலையிலேயே ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் கிம்யொங் உன்னுக்குமிடையில் முதல் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
மேற்படி சந்திப்பின்போது வடகொரிய அணுசக்தி நிகழ்ச்சித் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக வடகொரிய தலைவரும் ரஷ்ய ஜனாதிபதியும் தெரிவித்தனர்.
அவர்கள் நேற்று வியாழக்கிழமை மேற்கொண்ட சந்திப்பின்போது இரு நாட்டு உயர் மட்ட அதிகாரிகளுக்கும் மத்தியில் அமர்ந்திருந்து பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதன்போது தற்போதுள்ள நிலைமையில் முன்னேற்றத்தை எட்டுவது குறித்து கிம் யொங் உன்னும் தானும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துடன் தாம் அமைதியான தீர்வுக்கான வழிமுறைகள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக கிம் யொங் உன் கூறினார்.
அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன்னுக்கு சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுவதாகவும், சர்வதேச கட்டமைப்புக்குள் இந்த உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது புட்டின் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM