ஏ.பி.டி.வில்லியர்ஸின் அதிடியுடன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 202 ஓட்டங்களை குவித்துள்ளது.
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 42 ஆவது லீக் போட்டி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் ஆரம்பமானது.
அதன்படி இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய பெங்களூரு அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
அதன்படி அந்த அணியில் ஆரம்ப வீரர்களாக அணித் தலைவர் விராட் கோலி மற்றும் பார்தீவ் படேல் அதிடிகாட்டினர். அதனால் பெங்களூரு அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 35 ஓட்டங்களை குவித்தது.
இந் நிலையில் நான்காவது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி 13 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய மெய்ன் அலியுடன் இணைந்து அதிரடி காட்டிய பார்தீவ் படேலும் 6.2 ஆவது ஓவரில் மொத்தமாக 24 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், 7 நான்கு ஓட்டம் அடங்களாக 43 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து 3 ஆவது ஓவருக்காக கைகோர்த்தாடிய மொயன் அலி 7.3 ஆவது ஓவரில் 4 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, அக்சீப் நாத் 8 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 3 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இதனால் பெங்களூரு அணி 81 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தது.
அதன் பின்னர் 5 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த வில்லயர்ஸ் மற்றும் ஸ்டோனிஸ் மைதானத்தில் தொடர்ந்து அதிரடிகாட்ட ஆரம்பிக்க பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 122 ஓட்டங்களை குவித்தது.
17.2 ஆவது ஓவரில் 35 பந்துகளை எதிர்கொண்ட வில்லியர்ஸ் அரைசதம் கடந்தார்.
அத்துடன் 19 ஆவது ஓவரை எதிர்கொண்ட வில்லியர்ஸ் அந்த ஓவரின் 3,4, மற்றும் ஆவது பந்து வீச்சில் அடுத்தடுத்து 3 ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார்.
இறுதி ஓவரிலும் ஸ்டோனிஸ் மற்றும் வில்லியர்ஸ் அதிரடி காட்ட பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை குவித்தது.
ஆடுகளத்தில் வில்லியர்ஸ் 44 பந்துகளை எதிர்கொண்டு 7 ஆறு ஓட்டம், 3 நான்கு ஓட்டம் அடங்களாக 82 ஓட்டத்துடனும், ஸ்டோனிஸ் 34 பந்துகளில் 3 ஆறு ஓட்டம், 2 நான்கு ஓட்டம் அடங்களாக 46 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் அஷ்வின், முருகன் அஷ்வின் ஹார்டஸ் வில்ஜென் மற்றும் மொஹமட் ஷமி ஆயியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM