நாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின் சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும் , அதேபோல் இராணுவத்திற்கு உடனடியாக அதிகாரங்களை கொண்டுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புபட்ட குழு சிறிய குழுவாக இருந்தாலும் இவர்களுக்கு சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக நேற்று கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். நேற்று முன்தினம் இடம்பெற்ற தொடர்குண்டுன் வெடிப்பு சம்பவம் பலியாகிய பொதுமக்கள் குறித்தும் தமது அனுதாபங்களை இராணுவத்தளபதி தெரிவித்ததுடன் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில். இன்று நாட்டில் உள்ள சட்ட நகர்வுகளுக்கு அமைய இலங்கை இராணுவத்திற்கு இந்த சட்ட விதிமுறைகளுக்குள் செயற்பட முடியாத நிலைமையே உள்ளது. பொலிஸ் நடத்தும் விசாரணைகளுக்கு அப்பால் எமக்கும் விசாரணைகளை நடத்த, பரிசோதனை செய்யும் அதிகாரம் இந்த ஒருசில தினங்களுக்காவது வழங்கப்பட வேண்டும். அதேபோல் புலனாய்வு தகவல்களில் சில குறைபாடுகள் இடம்பெற்றுள்ளது. அதுவும் இந்த சம்பவம் இடம்பெற்ற காரணமாக உள்ளது என்பதை ஏற்றுகொள்ள வேண்டும். அதேபோல் இந்த சம்பவம் குறித்து இராணுவம் அறிந்திருக்கவில்லை. பொலிசார் இதுகுறித்து அறிந்துள்ளனர். அதேபோல் வநாத்தவில் சம்பவத்துடன் தொடர்புடைய செயற்பாடே இந்த தொடர் குண்டுவெடிப்பு என்பதும் உண்மை. இதன்போது பாதுகாப்புப்படை என்ற வகையில் அனைவரும் இணைந்து இந்த செயற்பாட்டை கையாளாது போனமையே நெருக்கடியாக அமைந்தது. இராணுவத்தளபதி என்ற வகையில் எனது கருத்து என்னவென்றால் தற்காலிகமாக சிறிது காலத்திற்கு என்றாலும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் சந்தேக நபர்களை கைதுசெய்யும் அதிகாரமும் எமக்கு வழங்கப்பட வேண்டும். வேறு எவரதும் தலையீடுகள் ஏற்பட முன்னர் எமக்கு சந்தேக நபர்களை கைதுசெய்யும் அதிகாரம் தற்காலிகமாகவேணும் வழங்கப்பட வேண்டும். எமக்கு அதிகாரம் இல்லாமையும் எமக்கு கிடைக்கும் தகவலை நாம் வேறு ஒருவருக்கு பகிரவேண்டிய நிலைமை உள்ளது அவர்கள் தான் இதனை செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு இருக்கின்றமையே இதற்குக் காரணமாகும். அதேபோல் இந்த தொடர்குண்டு வெடிப்புடன் தொடர்புபட்ட குழு ஒரு சிறிய குழுவாக இருந்தாலும் கூட இவர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் பயன்படுத்திய வெடிபொருட்கள் குறித்து பார்க்கையில் இவர்கள் இங்கேயே பயிற்ச்சிகளை பெற்றிருக்கவும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கான நிதி உதவிகள் சர்வதேசத்திடம் இருந்து கிடைத்திருக்கும் என்ற வாய்ப்புகள் உள்ளது என்றார்.
பயங்கரவாதத்தை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வேண்டும்
23 Apr, 2019 | 03:28 PM

-
சிறப்புக் கட்டுரை
வரவு - செலவு திட்ட ஆதரவுக்கு...
01 Oct, 2023 | 06:38 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜே. ஆரும் ரணிலும்
29 Sep, 2023 | 11:36 AM
-
சிறப்புக் கட்டுரை
இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட்...
26 Sep, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் - பைடன் கலந்துரையாடல் இல்லாதது...
24 Sep, 2023 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம்...
22 Sep, 2023 | 03:57 PM
-
சிறப்புக் கட்டுரை
முன்னாள் ஜனாதிபதிகளும் அரசியலும்
21 Sep, 2023 | 03:27 PM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம்...
2023-10-03 17:28:52

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழக பீடங்களாக...
2023-10-03 20:06:33

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை...
2023-10-03 20:29:45

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை...
2023-10-03 16:09:19

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மஹரகம சீதாவின்...
2023-10-03 19:43:02

தடைப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப்...
2023-10-03 16:44:05

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடையும்...
2023-10-03 16:43:14

நீதிபதி சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் அழுத்தம்...
2023-10-03 16:07:36

இ.தொ.கா. உப தலைவர் திருகேஸ் செல்லசாமியின்...
2023-10-03 18:40:12

இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் பங்கெடுத்த...
2023-10-03 19:30:42

வரவு - செலவுத் திட்டத்துக்கு பின்...
2023-10-03 16:42:15

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM