யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் ஒன்று உட்புகுந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் இது சாதாரண விபத்து என தெரியவந்ததை அடுத்து பதற்ற நிலை தணிந்துள்ளது.
நீதிபதி கடமைக்கு செல்லும் நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ். கச்சேரி – நல்லூர் வீதியில் அமைந்துள்ள நீதிபதியின் இல்லத்துக்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நீதிபதியின் இல்ல வாயில் கதவுடன் மோதியது. இதில் நீதிபதியின் இல்ல வாயில், அருகிலுள்ள வீட்டு மதில் ஆகியவை இதனால் உடைந்து சேதமாயின. அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றும் முறிந்தது.
சம்பவத்தையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸார் வாகனத்தை தீவிர சோதனை செய்தனார்.
வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM