எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி இடம்பெறவிருந்த 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியை பி.சி.சி.ஐ. சென்னையிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மூடப்பட்ட 3 கலரிகளை திறக்க டி.என்.சி.ஏ. அனுமதி பெறாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். 2019 சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 23 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமானது. இந் நிலையில் தற்போது இத் தொடரில் 40 லீக் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளது.
இதவேளை இத் தொடரின் இறுதிப் போட்டிய சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்துவதற்கு பி.சி.சி.ஐ. முடிவு செய்திருந்தது. எனினும் சேப்பாக்கம் மைதானத்தின் கலரி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.
இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஐ,ஜே,கே உள்ளிட்ட 3 கலரிகள் (12,000 இருக்கைகள்) அமரக்கூடிய வசதி கொண்டவை. இவற்றை திறப்பதற்கு தமிழக அரசிடம் இருந்து உரிய அனுமதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் பெற முடியவில்லை.
இதன் காரணமாகவே மேற்கண்ட முடிவினை பி.சி.சி.ஐ. எடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM