குண்டுதாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உலகநாடுகள் உதவவேண்டும்- ஐநா பாதுகாப்பு சபை

Published By: Rajeeban

23 Apr, 2019 | 10:19 AM
image

இலங்கையில் தேவாலயங்கள் ஐந்து நட்சத்திர விடுதிகள் வேறு மூன்று பகுதிகளில் இடம்பெற்ற கோழைத்தனமான கொடுரமான பயங்கரவாத தாக்குதல்களை ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள்  மிகக்கடுமையான விதத்தில் கண்டித்துள்ளனர் என பாதுகாப்பு சபையின் தலைவர் கிறிஸ்டொப் ஹெகுஸ்கென் தெரிவித்துள்ளார்

குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் வெளியிட்டுள்ளனர்

பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் பாதுகாப்பு சபையின் உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.

கண்டிக்கப்பட வேண்டிய இந்த பயங்கரவாத தாக்குதல்களிற்கு காரணமானவர்கள் அதற்கு ஆதரவு வழங்கியவர்கள் நிதி மற்றும் அனுசரனை வழங்கிய அனைவரையும் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டியதன் அவசியத்தையும் பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

உலக நாடுகளை அவர்களிற்கு உள்ள கடப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களிற்கு ஏற்ப இலங்கைக்கும் இந்த விடயத்தில் தொடர்புள்ள அதிகாரிகளிற்கும் முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02