(எம்.எப்.எம்.பஸீர்)
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் விமான நிலையத்துக்கு காணப்பட்ட அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு அதன் பாதுகாப்பு விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந் நிலையிலேயே விமானப்படையின் நடமாடும் சோதனைப் பிரிவு நேற்று இரவு 10.15 அளவில் சோதனையில் ஈடுபட்டிருந்த போது இந்த ஒருங்கிணைக்கப்பட்ட பி.வீ.சி. குழாய்க் குண்டு மீட்கப்பட்டதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறூப் கெப்டன் கிஹான் செனவிரதன வீரகேசரிக்கு தெரிவித்தார்.
இந் நிலையில் அதனை விமானப்படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர்.
தொடர்ந்தும் விமான நிலையத்துக்கு குண்டு அச்சுறுத்தல் உள்ள நிலையில் விமானப்படை பாதுகாப்பு பலப்படுத்தப்ப்ட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM