ஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டில் எவரும் இல்லாதவேளை தங்க நகையும் பணமும் திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை, கூழாவடிக்கு அண்மையாகவுள்ள ஒழுங்கையில் உள்ள வீடொன்றிலேயே இன்று சனிக்கிழமை பகல் குறித்த திருட்டு இடம்பெற்றுள்ளது.
வீட்டில் வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 5 பவுண் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபா பணத்தைத் திருடிக் கொண்டு தப்பித்துள்ளனர்.
மரண வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய குடும்பத்தலைவர் வீடு உடைக்கப்பட்டுள்ளமை குறித்து ஆராய்ந்த போதே திருட்டுச் சம்பவம் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM