பொலிஸார் கைது செய்ய முனைந்தபோது, கட்டுநாயக்க சீதுவ பகுதியில் செயற்பட்டு வந்த பாதாள குழு உறுப்பினரான பொடிசாகர இன்று பகல் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கொகரல்ல பொலிஸ் பிரிவில் கும்புக்கெடே, பஹல மெதகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
கட்டுநாயக்க, சீதுவ ஆகிய பகுதிகளில் 4 மனித கொலைகள், 2006 ஆம் ஆண்டு கம்பஹா பகுதியில் சிறைச்சாலை பஸ் வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, சிறைச்சாலை பொறுப்பதிகாரி ஒருவர் மீதான துப்பாக்கி பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச் சம்பவங்கள் மற்றும் கப்பம் பெறல் போன்ற பல குற்றச் செயல்களில் இவர் ஈடுபட்டிருந்தாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கும்புக்கெடே, பஹல மெதகம பகுதியின் வசிக்கும் தனது கள்ளக்காதலியின் வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, குறித்த வீடு நீர்கொழும்பு சட்டவலுவாக்கள் பிரிவு அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளுக்காக நேற்று இரவு நேரத்திலிருந்து பொடிசாகர இருந்த வீட்டினை பொலிஸார் நோட்டமிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸார் தன்னை நோட்டமிடுவதை அறிந்துக்கொண்டுள்ள பொடிசாகர 9.9 மில்லிமீற்றர் நீளமுள்ள துப்பாகியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
(க.கமலநாதன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM