மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
திருகோணமலையில் இருந்து தியத்தலாவை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் மற்றும் மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையால் இவ்விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 10 பேர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயமடைந்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொழும்பில் உறவினர்களைப் பார்க்கச் சென்ற இந்தக் குடும்பத்தினர், நுவரெலியா பிரதேசத்துக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பிற்குச் செல்லும் போது அவர்கள் இக்கோர விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாரதி வழங்கிய வாக்குமூலத்தில்,
“நான் அதிகாலை 1.15 மணியளவில் மஹியங்கனை நகரிலுள்ள உணவகம் ஒன் றில் பஸ்ஸை நிறுத்தினேன். அங்கு தேநீர் அருந்திய பின்னர் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தேன். பயணத்தை ஆரம்பித்து ஒரு சில நிமிடங்களில் அதிக வேகத்துடன் பிழையான பகுதியில் வேன் ஒன்று வருவதனை நான் அவதானித்தேன்.
நான் முடிந்தளவு ஓரத்துக்கு பஸ்ஸை நகர்த்திக் கொண்டு சென்றேன். எனினும் அந்த வேன் தனது வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நெருங்கி வந்தது.
நொடிப்பொழுதில் இடி விழுந்ததைப் போன்று இந்த வேன் மோதியது. நான் எவ்வளவு முயற்சித்தும் அதனைத் தடுக்க முடியவில்லை என மஹியங்கனையில் விபத்துக்குள்ளான தனியார் பஸ் சாரதி குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM