மகியங்கனை விபத்தில் கைது செய்யப்பட்ட பஸ் சாரதி பிணையில் விடுதலை

Published By: R. Kalaichelvan

18 Apr, 2019 | 10:23 AM
image

மகியங்கனை நகரில் இடம்பெற்ற விபத்தின்போது கைது செய்யப்பட்ட தனியார் பஸ்சின் சாரதி மகியங்கனை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதுநீதிபதி அவரை இரண்டு இலட்ச ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தார்.

மேலும் நீதிபதி அவரை எதிர்வரும் செப்டெம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

நேற்று அதிகாலை 1.35 மணியளவில் மகியங்கனை தேசிய கல்லூரிக்கு முன்பாக பதுளை பிரதான வழியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

 திருகோணமலையிலிருந்து தியத்தலாவைக்கு செல்லும் தனியார் பஸ்சொன்றும் மகியங்கனையிலிருந்து பதுளை வந்து கொண்டிருந்து வேன் ஒன்றுமே நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆண்கள் நான்கு பேரும்வ் பெண்கள் மூவரும் பிள்ளைகள் மூவருமாக இரு குடும்பத்தைச் சார்ந்த பத்துப்பேர் உயிரிழந்தனர்.

 மேலும் இரு பெண்கள் படுங்காயங்களுடன் மகியங்கனை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் அங்கிருந்து பதுளை பிரதான அரசினர் வைத்தியசாலைக்கு விசேட சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

விபத்து குறித்து ஸ்தல விசாரணைகளை மேற்கொண்ட மகியங்கனைப் பொலிசார் விபத்துக்குள்ளான தனியார் பஸ் சாரதியைக் கைது செய்து மகியங்கனை மஜிஸ்ரேட் நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

நீதிபதி அவரை இரண்டு இலட்ச ரூபா சரீரப்பிணையில் விடுவித்ததுடன்எதிர்வரும் செப்டெம்பர் 5  ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19