அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்குக் காரணம் பயம் - செல்வம் எம்.பி. புதுத்தகவல்

Published By: Daya

17 Apr, 2019 | 04:12 PM
image

(எம்.மனோசித்ரா)

மாகாணசபைத் தேர்தலை தற்போது நடத்தினால் தங்களுக்கு வெற்றி பெற முடியாது என்ற பயத்தின் காரணமாக அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றது என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

பல மாகாணங்களுக்கான ஆயுட் காலம் நிறைவடைந்து ஒரு வருடத்தையும் கடந்துள்ளது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதோடு, ஏனைய பல்வேறு அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்துள்ளன. 

அதிகாரப்பகிர்வு குறித்து பலராலும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து, அவற்றின் அதிகாரங்கள் ஆளுனருக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மாகாணசபைத் தேர்தலை தற்போது நடத்தினால் தங்களுக்கு வெற்றி பெற முடியாது என்ற பயத்தின் காரணமாக அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றது. பல மாகாணங்களுக்கான ஆயுட் காலம் நிறைவடைந்து ஒரு வருடத்தையும் கடந்துள்ளது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதோடு, ஏனைய பல்வேறு அமைப்புக்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்துள்ளன. 

எனினும் தமது பயத்தின் காரணமாக அரசாங்கம் அவற்றை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டுக் கொண்டிருகின்றது. மாகாண சபைகளை இல்லாமலாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குக் கூட கிடையாது. அது அரசியல் சாசனத்தின் சட்ட வரையறைக்கு உட்பட்டதாகும். எனவே தேர்தலை காலம் தாழ்த்துவதன் நோக்கம் மாகாண சபைகளை இல்லாமலாக்குவதற்காக இருக்க முடியாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வனஇலாகா திருடிய மக்களின் காணிகளை உடனடியாக...

2025-01-16 02:58:27
news-image

புத்தாண்டுக்கும் சிவப்பரிசி இல்லை, பொங்கல் பண்டிகைக்கும்...

2025-01-15 16:41:52
news-image

கனேடிய அரச பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பில்...

2025-01-15 23:14:56
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் யாரும்...

2025-01-15 16:46:15
news-image

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் கடமைகளை நிறைவேற்ற பொது...

2025-01-15 21:16:08
news-image

சிகரெட் வரி அதிகரிப்பை புகையிலை உற்பத்தி...

2025-01-15 17:32:01
news-image

சிறிய, நடுத்தரளவு வணிகங்களை மேம்படுத்துவதற்கான அமுலாக்க...

2025-01-15 20:04:14
news-image

இலங்கை - இந்திய உறவுகளை மேலும்...

2025-01-15 17:43:18
news-image

காலநிலையை கருத்தில் கொண்டு விவசாயிகள் அறுவடையில்...

2025-01-15 19:33:00
news-image

சீன - இலங்கை ஜனாதிபதிகள் இடையே...

2025-01-15 18:41:28
news-image

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...

2025-01-15 18:06:13
news-image

சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார உட்பட...

2025-01-15 18:08:20