கற்றாழை பிடுங்குவதற்கு பிரதேச சபையால் தடை விதிப்பு

Published By: R. Kalaichelvan

17 Apr, 2019 | 03:09 PM
image

மன்னார் வங்காலை கற்றாளம் பிட்டிப் பகுதியில் கற்றாழைச் செடிகளை பிடுங்குவதை நானாட்டான் பிரதேச சபை தடை விதித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மன்னார் நானட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கற்றாளம் பிட்டி பகுதியில் காணப்படும் கற்றாழைகளை சட்ட விரோதமாக மூட்டை மூட்டையாக  அகழ்வு செய்யப்பட்டு தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

எனினும் கற்றாழை அகழ்வுகளில் ஈடுபடுபவர்கள் வங்காலை கிராம மக்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எனினும் தொடர்ச்சியாக கற்றாழை செடிகள் சட்ட விரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அண்மையில் இடம் பெற்ற நானாட்டான் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஞானராஜ் சோசை அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் அடைப்படையில் வங்காலை கற்றாளம் பிட்டி பகுதியில் கற்றாழை அகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டது.

குறித்த தடை தொடர்பாக மும்மொழியினாலான அறிவித்தல் பலகை நானாட்டான் பிரதேச சபையால் இயற்கையாக கற்றாழை செடிகள் காணப்படும் பிரதேசமான வங்காலை கற்றாளம் பிட்டி பகுதியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மன்னாரில் உள்ள எருக்கலம் பிட்டி ,சாந்திபுரம் , தாராபுரம் போன்ற பகுதிகளிலும் சட்ட விரோதமான கற்றாழை அகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.

 எனவே சட்ட விரோத கற்றாழை அகழ்வு இடம் பெறும் அனைத்து பகுதிகளிலும் மும் மொழியிலான அறிவித்தல் பலகைகளை காட்சி படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44