
வளர்ப்பு நாய்களை பதிவுசெய்யும் கட்டளைச் சட்டம் மற்றும் நீர் வெறுப்புநோய் தொடர்பான கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளது. இதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா இது தொடர்பில் அமைச்சரவைக்கு முன்வைத்த பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே இத் தகவலை அமைச்சர் கயந்த கருணாதிலக வெளியிட்டார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் விபரிக்கையில்,
இந்த சட்டத்தில் காலத்திற்கேற்றால்போல் திருத்தம் செய்து குறித்த இரண்டு சட்டங்களையும் இணைத்து ஒரு தனிச் சட்டம் கொண்டு வருவதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கமைவாகவே இக் கட்டளைச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று வீதியோர நாய்கள் மூலம் பொது மக்கள் எதிர்நோக்கும் அசெளகரியங்கள், நோய்கள் மற்றும் சுகாதார அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமைச்சரவையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பான தகவல்களை சுகாதார அமைச்சு, கிராமிய பொருளாதார அமைச்சு யோசனைகளை முன்வைக்க வேண்டுமென்றும் அறிவிப்பதற்கு அமைச் சரவை தீர்மானித்துள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM