பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள பழைமைவாய்ந்த நோட்ரே டோம் என அழைக்கப்படும் தேவாலயத்தில் தீ பரவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தீ பரவியுள்ள நோட்ரே டோம் தேவாலயமானது சுமார் 850 வருடங்கள் பழைமை வாய்ந்தது. அத்துடன் குறித்த தேவாலயத்தை பார்வையிடுவதற்காக உலகெங்கிலுமிருந்து சுமார் பல்லாயிரக்கணக்கானோர் குறித்த பகுதிக்கு செல்வர்.
நோட்ரே டோம் தேவாயலத்தில் பிரான்ஸ் நேரப்படி மாலை 6 மணியளவில் பாரிய தீ பரவியுள்ளதாகவும் குறித்த தீயை கட்டுப்படுத்த பிரான்ஸின் தீயணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த தேவாலயத்தின் கோபுரப்பகுதியில் தற்போது பல மில்லியன் ரூபா செலவில் திருத்தவேலைப்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், தீ பரவலுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
தற்போது குறித்த தீ தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த நோட்ரே டோம் தேவாலயம் முற்றாக எரிந்து நாசமாகியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக குறித்த தேவாலயத்தில் தீ பரவலின் போது ட்ரோன் கமெரா புகைப்படத்தில் இதனை அவதானிக்க முடிகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM