"முன்பெல்லாம், சர்க்கஸில் மட்டும்தான் கோமாளிகள் இருப்பார்கள்; ஆனால் இப்போது, சர்க்காரிலேயே கோமாளிகள் இருக்கின்றனர்” என்று, திருச்சியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எதிர்வரும் 18 ஆம் திகதி லோக்சபா மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதைமுன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மற்றும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், திருச்சி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் திருச்சியில் உள்ள உழவர் சந்தையில் இன்று (13 ஆம் திகதி ) நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது; “திருச்சி, திமுகவின் இரும்புக் கோட்டை. திருச்சியில்தான் பல்வேறு சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்தியில் ஆளும் மோடியின் சர்வாதிகார ஆட்சியையும், மாநிலத்தில் ஆளும் உதவாக்கரை எடப்பாடி ஆட்சியையும் பற்றி ஒரு சில வரிகள் கூற விரும்புகிறேன்.
முன்பெல்லாம், வங்கிகளில் கொள்ளையடிப்பார்கள்; ஆனால் இப்போது, வங்கியையே கொள்ளையடிக்கின்றனர். முன்பெல்லாம், சர்க்கஸில் மட்டும்தான் கோமாளிகள் இருப்பார்கள்; ஆனால் இப்போது, சர்க்காரிலேயே கோமாளிகள் இருக்கின்றனர். முன்பெல்லாம், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார்கள். ஆனால் இப்போது, விவசாயத்தையே தள்ளுபடி செய்கின்றனர்.
முன்பெல்லாம், மீனவர்கள் கடலில் மீன்களை பிடித்தனர்; ஆனால் இப்போது, மீனவர்களையே பிடிக்கின்றனர். முன்பெல்லாம், வேட்பாளர்களை விலைக்கு வாங்கினார்கள். இப்போது, கட்சியையே விலைக்கு வாங்குகின்றனர். நான் யாரை கூறுகிறேன் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை, முரண்பாட்டின் மொத்த உருவம். ஆனால், காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி வெளியிட்ட தேர்தல் அறிக்கை, ஏழை மக்களுக்கானது. விவசாயக் கடனை செலுத்த முடியாதவர்கள் மீது குற்ற வழக்கு போடப்பட மாட்டாது. பிரதமராக வரக்கூடிய ராகுல்காந்தி, ரஃபேல் ஊழலை சிறிதும் பயமின்றி முதலில் பேசினார். அதற்கான ஆதாரங்கள் புத்தகமாகவே வெளியிடப்பட்டது.
மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் கொள்கை. தேர்தல் முடிவுகள் வந்த பின்னர், எடப்பாடியின் வாழ்க்கையே கிழியப்போகிறது. பாஜகவின் சேவகர்களாக அதிமுகவினர் உள்ளனர். இவர்களுக்கு விடை கொடுக்க வேண்டும்.
ராகுல்காந்தியை மன்னர் குடும்பம் என கூறுகிறீர்கள். ஆனால், ஆரம்ப கால கட்டத்தில் ஏழையாக இருந்த நீங்கள், ஏழைகளைப் பற்றி யோசித்தீர்களா..? கார்ப்பரேட்களுக்குதான் மோடி காவலாளி. பணமதிப்பிழப்பை தன்னிச்சையாக அறிவித்த சர்வாதிகாரி மோடி” என, ஸ்டாலின் பேசினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM