பரபரப்பான ஆட்டத்தில் சென்னைக்கு திரில் வெற்றி 

Published By: Vishnu

11 Apr, 2019 | 11:58 PM
image

ராஜஸ்தான் அணிக்கு எதிராக இடம்பெற்ற பரபரப்பான ஆட்டத்தில் இறுதிப் பந்தில் ஆறு ஓட்டத்தை விளாசிய சாண்ட்னர் சென்னை அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 25 ஆவது லீக் ஆட்டம் இன்றிரவு 8.00 மணிக்கு ஜெய்பூர் மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, ராஜஸ்தான் அணி முதலாவதாக துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை குவித்தது.

152 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணியின் முதல் நான்கு விக்கெட்டுக்களும் ராஜஸ்தானின் சிறந்த பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு காரணமாக 24 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

வேட்சன் முதல் ஓவரின் நான்காவது பந்தில் டக்கவுட் முறையில் போல்ட் முறையிலும், ரய்னா 1.5 ஆவது ஓவரில் ரன்அவுட் முறையிலும், டூப்பிளஸ்ஸி மூன்றாவது ஓவரின் இறுதிப் பந்தில் 7 ஓட்டத்துடனும், 5.5 ஆவது ஓவரில் கேதர் யாதவ் ஒரு ஓட்டத்துடன் பென் ஸ்டோக்ஸின் அபார பிடியெடுப்பினால் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதையடுத்து 5 ஆவது விக்கெட்டுக்காக சென்னை அணித் தலைவர் தோனி மற்றும் ராயுடு ஜேடி சேர்ந்து அதிரடி காட்ட ஆரம்பிக்க சென்னை அணி 15 ஓவர்களின் நிறைவில் 100 ஓட்டங்களை கடந்ததுடன், யாதவ் மொத்மாக 41 பந்துகளை எதிர்கொண்டு 3 ஆறு ஓட்டம், 2 நான்கு ஓட்டம் அடங்களாக அரைசதம் கடந்தார்.

எனினும் அவர் 17.4 ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸின் பந்து வீச்சில் 57 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (119 -5).

அவரையடுத்து களமிறங்கிய துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க சென்னையின் வெற்றிக்கு 12 பந்துகளில் 32 ஓட்டம் ஓட்டம் என்ற நிலையிருக்க தோனி, 19.4 ஓவரில் மொத்தமாக 39 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் பெற்றார்.

இறுதியாக 6 பந்துகளுக்கு 18 ஓட்டம் என்ற நிலையானது. இறுதி ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஜடேஜா அபாரமாக 6 ஓட்டத்தை விளாசித் தள்ளினார். அத்துடன் இரண்டாவது பந்தும் நோ போலாக அமைந்தது. இதனால் 5 பந்துக்கு 10 என்ற நிலையானது.

எனினும் அந்த ஓவரின் 3 ஆவது பந்தில் தோனி போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேற ஆட்டம் சூடுபிடித்தது.

தொடர்ந்து மிட்செல் சாண்ட்னர் இறுதிப் பந்தில் 6 ஓட்டத்தை விளாசி அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும், குல்கரனி, உனாட்கட், ஆர்ச்சர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41