சகல மக்களையும் இணைக்கும் மத்திய நிலையத்தை ஜே.வி.பி. அமைக்க முயற்சி

Published By: Vishnu

11 Apr, 2019 | 06:47 PM
image

(ஆர்.யசி)

மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் சகல மக்களையும் இணைக்கும் மத்திய நிலையம் ஒன்றினை அமைக்கவுள்ளதாக தெரிவித்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, இது எந்த அரசியல் கட்சிகளையும் சாராது நாட்டு மக்களை மீட்டெடுக்கும் பொதுவான வேலைத்திட்டமாகும். இதனை உருவாக்க சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்கால அரசியல் நிலைமைகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஜே.வி.பியிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை அந்நிய ஆட்சியில் இருந்து விடுபட்டு 70 ஆண்டுகள் கடந்து சுயாதீன ஆட்சியை இதுவரையில் நடத்தி வருகின்ற போதிலும்கூட இலங்கை மக்களுக்கு நன்மைதரும் ஒரு ஆட்சியை இந்த ஆட்சியாளர்களினால் முன்னெடுக்க முடியாது போயுள்ளது. ஆகவே  இனியும் இந்த ஆட்சியாளர்களை கொண்டு நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. இன்று நாட்டின் கடன் தொகை அதிகரித்துள்ளது. அபிவிருத்திகள் கைவிடப்பட்டுள்ளது, மக்களின் வாழ்வாதாரம் நெருக்கப்பட்டுள்ளது. இவற்றை மாற்றியமைக்க வேண்டும். 

அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தம் வெற்றிபெறாது போனால் ஜே.வி.பியும் ஜனாதிபதி தேர்தல் கலத்தில் குதிக்கும். மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி பிரதான இரண்டு கட்சிகளையும் வீழ்த்தும் எனவும் அதற்காக பிரதான இரண்டு கட்சிகள் தவிர்ந்து  ஏனைய சகல அரசியல் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32